திருவனந்தபுரம்: வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலையானது புதன்கிழமைக்குள் மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது என்றும் இதன் காரணமாக கேரளாவில் கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் உள்பட 12 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடற்பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளதை அடுத்து மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இம்மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிப்போர், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அடுத்த ஓரிரு தினங்களுக்கு கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் ஆறுகள், கால்வாய்களின் அருகே செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

