இந்து அமைப்புகளின் அறிவிப்பால் பதற்றம்: மதுராவில் 144 தடை உத்தரவு அமல்

2 mins read
970320c5-c570-40ed-9ed6-e6f0a4763519
-

லக்னோ: இந்து அமைப்­பு­க­ளின் மிரட்­டல் அறி­விப்­பை­ய­டுத்து மதுரா நக­ரில் பதற்­றம் நிலவி வரு­கிறது. இதை­ய­டுத்து அங்கு 144 தடை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

உத்­த­ரப் பிர­தேச மாநி­லம் மதுரா­வில் கியான்­வாபி பள்­ளி­வா­சல் உள்­ளது. அங்கு ஏரா­ள­மா­னோர் வருகை புரி­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில் அந்­தப் பள்­ளி­வா­ச­லில் கிருஷ்­ணர் சிலை வைக்­கப்­போ­வ­தாக இந்து அமைப்­பு­கள் அறி­வித்­துள்­ளன.

அர­சின் தடை உத்­த­ரவை மீறி ஊர்­வ­லம் நடத்த முயன்ற அந்த அமைப்­பு­க­ளின் மூன்று முக்­கிய நிர்­வா­கி­கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

அயோத்­தி­யைப் போலவே மது­ரா­வி­லும் பிரச்­சினை வெடித்­துள்­ளது. அங்­குள்ள கோவில்­தான் கட­வுள் கிருஷ்­ணர் பிறந்த இடம் என்­பது இந்­துக்­க­ளின் நம்­பிக்கை.

அங்­கி­ருந்த பழமை வாய்ந்த கிருஷ்­ணர் கோவில் இடிக்­கப்­பட்டு, அதன் பாதி நிலத்­தில் கியான்­வாபி எனும் பள்­ளி­வா­சல் கட்­டப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அயோத்தி ராம­ஜென்ம பூமி வழக்­கில் உச்ச நீதி­மன்­றம் தீர்ப்பு அளித்­ததை அடுத்து, மதுரா விவ­கா­ரம் மீண்­டும் கிளம்­பி­யுள்­ளது.

இது தொடர்­பாக மதுரா நீதி­மன்றத்­தில் பல்­வேறு இந்து அமைப்­பு­கள் வழக்­கு­கள் தொடுத்­துள்­ளன.

மேலும், டிசம்­பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்­தை­யொட்டி, மதுரா கியான்­வாபி பள்ளி­வா­ச­லில் கிருஷ்­ணர் சிலையை வைக்­கப் போவ­தாக இந்து அமைப்பு­கள் அறி­வித்­துள்­ளன.

மது­ரா­வின் நாரா­யணி சேனா, அகில பார­திய இந்து மகா­சபா உள்ளிட்ட சில அமைப்­பு­கள் ஒருங்­கி­ணைந்து வெளி­யிட்ட இந்த அறி­விப்­பால் மது­ரா­வில் பதற்­றம் நில­வு­கிறது. இந்­நி­லை­யில் அங்கு 144 தடை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

தடையை மீறு­வோர் மீது கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என மதுரா காவல் கண்­கா­ணிப்­பா­ளர் கவு­ரவ் குரோ­வர் எச்­ச­ரித்­துள்­ளார்.

மேலும், மிரட்­டல் அறி­விப்பை வெளி­யிட்ட அனை­வ­ரும் கைது செய்­யப்­ப­டு­வார்­கள் என்­றும் நாராயணி சேனா அமைப்­பின் பொரு­ளா­ளர் அமித் மிஸ்ரா உள்­ளிட்ட மூவர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர் என்­றும் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரி­வித்தார்.