ஓமிக்ரான் கட்டுப்பாடுகள்

1 mins read
22c60f36-1312-4258-9c97-91187d15995e
-

புது­டெல்லி: புதிய வகை ஓமிக்­ரான் தொற்று பாதிப்பு உள்ள நாடு­களில் இருந்து இந்­தியா வரும் பய­ணி­கள் அனை­வ­ருக்­கும் கடு­மை­யான புதிய கட்­டுப்­பா­டு­கள் அனைத்து விமான நிலை­யங்­களிலும் செவ்­வாய்க்­கி­ழமை நள்­ளி­ரவு முதல் அம­லுக்கு வந்­தன.

தென்­னாப்­பி­ரிக்கா, சீனா, நியூ­சி­லாந்து, ஹாங்­காங், பிரிட்­டன், பிரே­சில், பங்­ளா­தேஷ், போட்ஸ்­வானா, மொரி­ஷி­யஸ், ஸிம்­பாப்வே, சிங்­கப்பூா், இஸ்­ரேல் உள்­ளிட்ட 12 நாடு­களில் இருந்து வரு­வோ­ருக்கு விமான நிலைய வளா­கத்­தி­லேயே ஆர்­டி­பி­சி­ஆர் பரி­சோ­தனை கட்­டா­யம் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பரி­சோ­தனை முடி­வு­க­ளைப் பெறும் வரை விமான நிலைய வளா­கத்­தி­லேயே பய­ணி­க­ளைத் தனி­மைப்­ப­டுத்த வேண்­டும்.

தொற்று இல்லை என பரி­சோ­தனை முடி­வில் தெரி­ய­வந்­தா­லும் பய­ணி­கள் தங்­களை ஏழு நாள்­கள் வீட்­டில் தனி­மைப்­ப­டுத்­திக்கொள்ள வேண்­டும். அதன்­பின்னா் 8ஆவது நாளில் மீண்­டும் ஆர்­டி­பி­சி­ஆர் பரி­சோ­தனை செய்­யப்­படும்.

அப்­போ­தும் தொற்­றில்லை என முடிவு வந்­தால், அதற்கு அடுத்த ஏழு நாள்­க­ளுக்கு அவா்க­ளது உடல்­நி­லை­யைக் கண்­கா­ணிக்க வேண்­டும்.

இந்­திய விமான நிலை­யங்­களில் கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டுள்ள 12 நாடு­க­ளைச் சேர்ந்த பய­ணி­க­ளுக்கு மகா­ராஷ்­டிர மாநி­லத்­தில் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளன.

இவர்­கள் ஏழு நாள் கட்­டா­யத் தனி­மை­ப்ப­டுத்­த­லில் வைக்­கப்­ப­டு­வர். 2வது நாள், 4வது நாள், 7வது நாள் என மூன்று முறை ஆர்­டி­பி­சி­ஆர் பரி­சோ­தனை எடுக்­கப்­படும். அதில் தொற்று இல்லை என உறு­தி­யா­னா­லும் 14 நாட்­கள் வீட்டு தனி­மை­ப்ப­டுத்­து­த­லில் வைக்­கப்­

ப­டு­வர் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் பயணிகளுக்கு கட்டாயப் பரிசோதனை