சிறுத்தையுடன் சண்டையிட்டு மகனை மீட்ட பெண்

சிறுத்தையுடன் சண்டையிட்டு மகனை மீட்ட பெண்

1 mins read
798d3292-afe9-4774-aa98-ef0929fe0b83
சிறுத்தை தாக்கியதில் காயமடைந்த தாயும் மகனும். படம்: இந்திய ஊடகம் -

இந்­தூர்: தமது எட்டு வயது மகனை சிறுத்­தைப் புலி ஒன்று வாயில் கவ்­விக்­கொண்டு ஓடு­வ­தைக் கண்ட பெண் அதனை கிட்­டத்­தட்ட ஒரு கிலோ­மீட்­டர் தூரம் துரத்­திச் சென்­றார். சிறுத்­தையை நெருங்­கி­ய­தும் அத­னு­டன் போரா­டி­னார் கிரண் பாய்கா என்­னும் அந்­தப் பெண்.

ஒரு குச்­சியை எடுத்து அவர் தாக்­கத் தொடங்­கி­யதும் ராகுல் என்­னும் அந்­தச் சிறு­வனை விடு­வித்­து­விட்டு அந்­தப் பெண் மீது பாய்ந்­தது சிறுத்தை. அதன் பாதங்­க­ளைப் பிடித்­துத் தள்­ளி­விட்டு குச்­சி­யால் ஓங்­கி­ய­போ­தும் சிறுத்தை நக­ர­வில்லை. பெண்­ணின் அல­றல் சத்­தம் கேட்டு கிரா­ம­வா­சி­கள் ஓடி வரு­வ­தைக் கண்­ட­தும் அது அங்­கி­ருந்து தப்­பி­விட்­டது.

கிர­ணுக்­கும் அவ­ரது மக­னுக்­கும் கீறல் காயங்­கள் ஏற்­பட்­டன. உட­ன­டி­யாக அவ்­வி­ரு­வ­ரும் மருத்­து­வ­

ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­தாக நியூஸ் 18 இணை­யச் செய்தி கூறி­யது.

மத்­தி­யப் பிர­தேச மாநி­லத்­தில் சஞ்­சஹ் புலி­கள் சர­ணா­ல­யம் அருகே உள்ள பதி­ஜா­ரியா என்­னும் கிரா­மத்­தில் நவம்­பர் 28ஆம் தேதி இரவு 7 மணி­ய­ள­வில் இச்­சம்­ப­வம் நிகழ்ந்­த­தா­க­வும் அச்­செய்தி குறிப்­பிட்­டுள்­ளது.