தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

6 லட்சம் பேர் குடியுரிமை துறந்தனர்

1 mins read
dcbf2332-8505-4cda-a571-9ce3b4ef099d
-

புது­டெல்லி: மக்­க­ள­வை­யில் எழுப்­பப்­பட்ட கேள்­விக்கு நேற்று முன்­தி­னம் மத்­திய உள்­துறை இணை­ய­மைச்சா் நித்­யா­னந்த் ராய் எழுத்­து­பூா்வ­மா­கப் பதி­ல­ளித்­தார்.

"2017ஆம் ஆண்­டில் 1,33,049 போ், 2018ல் 1,34,561 போ், 2019ல் 1,44,017 போ், 2020ல் 85,248 போ், இந்த ஆண்டு செப்­டம்­பர் 30 வரை 1,11,287 போ் என மொத்­தம் 6 லட்­சத்­துக்­கும் மேற்­பட்­ட­வா்­கள் இந்­திய குடி­யு­ரி­மையை துறந்­துள்­ளனா். ஐந்­தாண்­டு­களில் வெளி­நா­டு­க­ளைச் சோ்ந்த 10,645 போ் இந்­தி­யக் குடி­யு­ரி­மைக்கு விண்­ணப்­பித்­தனா். அவா்களில் 4,177 பேருக்கு குடி­யு­ரிமை வழங்­கப்­பட்­டுள்­ளது. வெளி­நா­டு­களில் 1,33,83,718 இந்­தி­யா்­கள் வசிக்­கின்­றனா்," என்­றார் அவர்.