நடுவானில் பயணி இறந்துவிட்டதால் புறப்பட்ட இடத்துக்கே திரும்பிய ஏர் இந்தியா விமானம்

இந்தியாவின் டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலம், நியூவார்க் நகருக்குப் பறந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானம், மூன்று மணிநேரத்தில் டெல்லிக்கே திரும்பியது.

அந்த விமானத்தில் இருந்த ஆண் பயணி ஒருவர் இறந்துவிட்டதே அதற்குக் காரணம்.

விமான நிலைய மருத்துவக் குழுவினர், அந்தப் பயணியை முழுமையாக பரிசோதித்தபின் அவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்.

அமெரிக்க நாட்டவரான அந்தப் பயணி, தம் மனைவியுடன் விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்தார்.

“டிசம்பர் 4ஆம் தேதி, டெல்லியில் இருந்து நியூவார்க்கிற்குப் பறந்துகொண்டிருந்த ஏஐ-105 விமானம், டெல்லிக்குத் திரும்பியது. ஆண் பயணி ஒருவர் இறந்துவிட்டதே அதற்குக் காரணம்,” என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

டெல்லி விமான நிலையத்தில் அந்த விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.

“வேறு விமானச் சிப்பந்திகளுடன் அதே விமானம் மாலை 4 மணியளவில் புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அந்த அதிகாரி சொன்னார்.

விமான நிலைய போலிசாரிடம் இந்த விவகாரம் ஒப்படைக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!