சூரத்: குஜராத்தில் தந்தை இல்லாத நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஒரே நேரத்தில் திரு
மணம் நடைபெற்றது. சூரத் நகரில் நடந்த இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு தொழிலதிபர் மகேஷ் சவானி என்பவர் தனது சொந்தச் செலவில் ஏற்பாடு செய்திருந்தார்.
மூன்று இஸ்லாமியப் பெண்கள், ஒரு கிறிஸ்தவப் பெண் உட்பட மொத்தம் 135 பெண்களுக்கு அவரவர் சமய வழக்கப்படி திரு
மணம் செய்து வைக்கப்பட்டது.
மேலும், மணப்பெண்ணுக்குத் தேவையான சீர்வரிசையும் வழங்கப்பட்டது. ஒரு தந்தையைப்போல் மகேஷ் சவானி தங்களது திரு
மணத்திற்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும் இது மகிழ்ச்சி அளிப்பதாகவும் மணப்பெண்கள் கூறினர்.
வைர வியாபாரம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வரும் மகேஷ் சவானி, தந்தை இல்லாத ஏழைப்பெண்
களுக்கு ஆண்டுதோறும் மணமுடித்து வைக்கிறார்.

