தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடத்தல் தங்கம் ஒரு கிலோ மாயம்: சிக்கிய அதிகாரிகள்

1 mins read
05ceb1c9-bd35-404e-bdad-4d7670d6747c
-

திரு­வ­னந்­த­புரம்: வெளி­நா­டு­களில் இருந்து கடத்தி வரப்­பட்டு, கேரள விமான நிலை­யத்­தில் பறி­மு­தல் செய்­யப்­பட்ட ஒரு கிலோ தங்­கம் மாய­மா­னது பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

இது தொடர்­பாக சுங்க அதிகாரி­கள் மூன்று பேர் உட­ன­டி­யாக இடை­நீக்­கம் செய்­யப்­பட்­ட­னர்.

வளை­குடா நாடு­களில் இருந்து கேர­ளா­வுக்கு தங்­கம் கடத்தி வரு­வது அதி­க­ரித்­துள்­ளது. இத­னால் அங்­குள்ள விமான நிலை­யங்­களில் கண்­கா­ணிப்பு தீவி­ர­ம­டைந்­துள்­ளது.

கடத்­தல் தங்­கம் பறி­மு­தல் செய்­யப்­பட்ட பின்­னர், முத­லில் சுங்க அதி­கா­ரி­க­ளின் பாது­காப்­பில் வைக்­கப்­படும். இந்­நி­லை­யில், அண்­மை­யில் இவ்­வாறு பறி­மு­தல் செய்­யப்­பட்டு அதி­கா­ரி­க­ளின் பாது­காப்­பில் உள்ள தங்க நகை­கள், தங்­கக் கட்­டி­கள் அனைத்­தும் ஆய்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டன. அப்­போது மொத்த தங்­கத்­தில் சுமார் ஒரு கிலோ தங்­கம் மாய­மாகி இருப்­பது தெரி­ய­வந்­தது.

இதை­ய­டுத்து உய­ர­தி­கா­ரி­கள் இது­கு­றித்து விசா­ரணை மேற்­கொண்­ட­னர். முதல் நட­வ­டிக்­கை­யாக மூன்று சுங்க அதி­கா­ரி­கள் பணி­யில் இருந்து இடை­நீக்­கம் செய்­யப்­பட்­டுள்­ள­னர்.