உணவில் போதை மருந்து கலந்து மாணவிகளிடம் பாலியல் வன்கொடுமை

1 mins read
8bb9e65c-da46-4c12-8a2a-5abd8ae2aba8
-

முசா­பர்­ந­கர்: மாண­வி­க­ளுக்கு உண­வில் போதை மருந்து கலந்­து­கொ­டுத்து பாலி­யல் கொடுமை செய்­த­தாக பள்ளி முதல்­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். உத்­த­ரப் பிர­தேச மாநி­லத்­தின் முசா­பர் நக­ரில் உள்ள சூர்­ய­தேவ் பள்­ளி­யில்­தான் இந்­தக் கொடூ­ரச் சம்­ப­வம் நிகழ்ந்­துள்­ளது. அந்த மாண­வி­கள் பயி­லும் சூர்­ய­தேவ் பள்­ளிக்கு அரு­கே­யுள்ள ஜிஜி­எஸ் இன்­டர்­நே­ஷ­னல் பள்­ளி­யில் நவம்­பர் 19ஆம் தேதி பயிற்­சித்­தேர்வு நடை­பெற்­றது. இந்­நி­லை­யில் தேர்­வுக்கு முதல்­நாள் 17 மாண­வி­களை மட்­டும் சூர்­ய­தேவ் பள்­ளி­யில் இர­வில் தங்­க­வைத்­த­னர். அவர்­க­ளுக்கு இரவு உண­வில் போதை­ம­ருந்து கலந்­து­கொ­டுத்து பாலி­யல் கொடுமை நடந்­த­தாக புகார் அளிக்­கப்­பட்­டது. ஆனால் காவல்­துறை எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­க­வில்லை. இதை­ய­டுத்து அத்­தொ­குதி எம்­எல்ஏ பிர­மோத் உத்­வல் தலை­யீட்­டின் பேரில் ஜிஜி­எஸ் பள்ளி முதல்­வர் யோகேஷ் குமார் கைது­செய்­யப்­பட்­டார். சூர்­ய­தேவ்­பள்ளி முதல்வர் அர்­ஜுன்­சிங் தேடப்­பட்டு வரு­கி­றார்.