முழு ராணுவ மரியாதையுடன் முப்படைத் தளபதி நல்லுடல் தகனம்

முழு ராணுவ மரியாதையுடன் முப்படைத் தளபதி நல்லுடல் தகனம்

2 mins read
f023e867-0891-4c6f-834e-97967badd90d
படையினர் சூழ, முப்படைத் தளபதி பிபின் ராவத்தின் வீட்டிலிருந்து தகனச்சாலைக்கு எடுத்துச் செல்லப்படும் அவரது நல்லுடல். படம்: இபிஏ -

புது­டெல்லி: ஹெலி­காப்­டர் விபத்­தில் கால­மான இந்­திய முப்­ப­டைத் தள­பதி பிபின் ராவத்­தின் நல்­லு­டல் முழு ராணுவ மரி­யா­தை­யு­டன் டெல்­லி­யில் நேற்று எரி­யூட்­டப்­பட்­டது.

தமிழ்­நாட்­டின் சூலூர் விமா­னப்­படைத் தளத்­தி­லி­ருந்து நீல­கிரி மாவட்­டம் வெலிங்­டன் ராணு­வப் பயிற்­சிப் பள்­ளிக்கு ஹெலி­காப்­ட­ரில் சென்­ற­போது, குன்­னூர் அருகே அது விழுந்து நொறுங்கி, தீப்பிடித்­தது. இதில் தளபதி, அவ­ரு­டைய துணை­வி­யார் மது­லிகா உட்­பட 13 பேர் மாண்­டு­போ­யி­னர்.

இத­னைத் தொடர்ந்து, திரு ராவத் மற்­றும் அவ­ரு­டைய துணைவி­யா­ரின் நல்­லு­டல்­கள் டெல்­லிக்குக் கொண்டு செல்­லப்­பட்டு, அங்குள்ள பிரார் சதுக்க தக­னச்­சா­லை­யில் நேற்று மாலை இறு­திச்­ ச­டங்­கு­கள் இடம்­பெற்­றன. 17 குண்டு­கள் முழங்க ராணுவ மரி­யாதை அளிக்­கப்­பட்­டது. இறு­திச் சடங்கு நிகழ்­வில் கிட்­டத்­தட்ட 800 படை வீரர்­கள் பங்­கேற்­ற­னர்.

இறு­தி­யாக, மகள்­கள் கிரித்­தி­கா­வும் தாரி­ணி­யும் தங்­கள் பெற்­றோ­ரின் உடல்­க­ளுக்கு எரி­யூட்­டினர்.

டெல்­லி­யில் உள்ள முப்­ப­டைத் தள­ப­தி­யின் வீட்­டில் பிற்­ப­கல் 2 மணி வரை அவர்­க­ளின் உடல்­கள் அஞ்­சலி செலுத்­து­வ­தற்­காக வைக்­கப்­பட்­டி­ருந்­தன. அதன்­பின், பீரங்கி வண்டி மூலம் இரு­வ­ரின் உடல்­களும் தக­னச்­சா­லைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டன.

வழி­நெ­டு­கி­லும் பொது­மக்­கள் வீர முழக்­கம் எழுப்பி, முப்­ப­டைத் தள­ப­திக்கு அஞ்­சலி செலுத்­தி­னர்.

இந்­தி­யா­விற்­கான பிரான்ஸ் தூதர் இம்­மா­னு­வெல் லெனைன், பிரிட்­டிஷ் தூதர் அலெக்ஸ் எல்­லிஸ் ஆகி­யோர் இறு­திச் சடங்கு நிகழ்­வில் கலந்­து­கொண்­ட­னர். இலங்கை, பூட்­டான், நேப்­பா­ளம், பங்­ளா­தேஷ் ஆகிய நாடு­க­ளின் ராணு­வத் தள­பதி­களும் திரு ராவத்­தின் இறுதி ஊர்­வ­லத்­தில் பங்­கேற்றனர்.

விபத்­தில் மாண்ட பிரி­கே­டி­யர் லி­ட­ரின் நல்­லு­ட­லும் ராணுவ மரி­யா­தை­யு­டன் நேற்று எரி­யூட்­டப்­பட்­டது.