ஓமிக்ரான்: மும்பையில் 144 தடை உத்தரவு

ஓமிக்ரான்: மும்பையில் 144 தடை உத்தரவு

2 mins read
6c9ad3d7-e5b2-421c-8c4b-1fd415704322
மகாராஷ்டிராவில் கொரோனா பரிசோதனை தீவிரமடைந்துள்ளது. படம்: ஊடகம் -

மும்பை: ஓமிக்­ரான் தொற்­றுப் பர­வலை தடுக்­கும் வித­மாக மும்­பை­யில் 48 மணி நேரத்­துக்கு 144 தடை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இதை­ய­டுத்து அந்­ந­க­ரில் நான்கு பேருக்கு மேல் ஒன்­று­கூட தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தி­யா­வில் மிக அதி­க­பட்­ச­மாக மகா­ராஷ்­டி­ரா­வில் 17 பேருக்கு ஓமிக்­ரான் பாதிப்பு இருப்­பது உறு­தி­யாகி உள்­ளது. இத­னால் மும்­பை­யில் நேற்­றும் இன்­றும் 144 தடை உத்­த­ரவு அமல்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக அம்­மா­நில அரசு அறி­வித்­தது.

கொரோனா தொற்­றின் இரண்­டா­வது அலை­யால் மகா­ராஷ்­டிரா கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­டது. அச்­ச­ம­யம் அம்­மா­நி­லத்­தில்­தான் அதிக அளவு உயி­ரி­ழப்பு ஏற்­பட்­டது. இதே போல் ஓமிக்­ரான் பாதிப்பு பர­வி­வி­டக் கூடாது என மகா­ராஷ்­டிர அரசு கவ­ன­மாக உள்­ளது.

இதற்­கி­டையே தான்­சா­னியா, தென் ஆப்­பி­ரிக்­கா­வில் இருந்­து­வந்த மூன்று வயது குழந்தை உள்­பட புதி­தாக ஏழு பேருக்கு ஓமிக்­ரான் பாதிப்பு இருப்­பது நேற்று முன்­தி­னம் உறு­தி­யா­னது.

ராஜஸ்­தா­னில் ஒன்­பது பேருக்­கும் குஜ­ராத்­தில் மூவ­ருக்­கும் கர்­நா­ட­கா­வில் இரு­வ­ருக்­கும் டெல்­லி­யில் ஒரு­வ­ருக்­கும் ஓமிக்­ரான் பாதிப்பு இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

நாடு முழு­வ­தும் ஓமிக்­ரான் பாதிப்பு இருப்­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை 32 ஆக உயர்ந்­துள்­ளது.

இந்­தி­யா­வில் ஐந்து மாநி­லங்­களில் ஓமிக்­ரான் பாதிப்பு கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. எனி­னும் பாதிக்­கப்­பட்­டுள்ள அனை­வ­ரி­டத்­தி­லும் தொற்­றுக்­கான லேசான அறி­குறி­கள் மட்­டுமே தென்­ப­டு­வ­தாக மத்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இதற்­கி­டையே, நாடு முழு­வதும் 86 விழுக்­காட்­டி­ன­ருக்கு ஒரு தடுப்பூசி­யே­னும் போடப்­பட்­டுள்­ள­தாக மத்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இதை நூறு விழுக்­கா­டாக உயர்த்த வேண்­டும் என்­பதே மத்­திய அர­சின் விருப்­பம் என சுகா­தார அமைச்­சர் மன்­சுக் மாண்­ட­வியா கூறி­யுள்­ளார்.