ஜனநாயக மதிப்புகள்: நட்பு நாடுகளுக்கு மோடி அழைப்பு

ஜனநாயக மதிப்புகள்: நட்பு நாடுகளுக்கு மோடி அழைப்பு

2 mins read
a3d7523f-8638-46f2-95a0-8b2edb1d978d
-

புது­டெல்லி: உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக உலகளவில் ஜனநாயக மதிப்புகளை வலுப்படுத்த நட்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயாராக உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்துக்கான உச்சி மாநாட்டில் காணொளி மூலம் பங்கேற்றுப் பேசிய அவர், இந்திய ஜனநாயக ஆட்சியின் நான்கு தூண்களாக உணர்திறன், பொறுப்புக்கூறல், பங்கேற்பு, சீர்திருத்த நோக்குநிலை ஆகியவை இருப்பதாகக் குறிப்பிட்டார்.

மேலும், ஜனநாயக நாடுகள், தங்கள் அரசியல் சாசனத்தில் பொதிந்துள்ள மதிப்புகளை வழங்க வேண்டும் என்றார் மோடி.

அமெரிக்க அதிபரால் நேற்று முன்தினம் வாஷிங்டனில் தொடங்கி வைக்கப்பட்ட இந்த மாநாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றுப் பேசினர்.

ஜன­நா­ய­கத்தை நேர்­ம­றை­யா­கவோ அல்­லது எதிர்­ம­றை­யா­கவோ பாதிக்­கும் தொழில்­நுட்­பத்­தின் திற­னைக் கருத்­தில் கொண்டு, தொழில்­நுட்ப நிறு­வ­னங்­கள் ஜன­நா­யக சமூ­கங்­க­ளைப் பாது­காப்­ப­தில் பங்­க­ளிக்க வேண்­டும் என்று பிர­த­மர் மோடி வலி­யு­றுத்­தி­னார்.

சமூக ஊட­கங்­கள், மின்­னி­லக்க பணம் (கிரிப்­டோ­க­ரன்சி) ஆகி­யவை தொடர்­பில் உல­க­ளா­விய விதி­மு­றை­களை வகுப்­ப­தற்­கான கூட்டு முயற்சி தேவை என்று குறிப்­பிட்ட அவர், எந்த அம்­ச­மும் ஜன­நா­ய­கத்தை வலுப்­ப­டுத்த உதவ வேண்­டுமே தவிர, தரம் தாழ்த்­தும் வகை­யில் இருக்­கக் கூடாது என்று தெரி­வித்­தார்.

சுதந்­தி­ர­மான, நியா­ய­மான தேர்­தலை நடத்­து­வ­தி­லும் புது­மை­யான மின்­னி­லக்­கத் தீர்­வு­கள் மூலம் நிர்­வா­கத்­தின் அனைத்து துறை­களி­லும் வெளிப்­ப­டைத்­தன்­மையை அதி­க­ரிப்­ப­தி­லும் இந்­தியா தனது நிபு­ணத்­து­வத்­தைப் உலக நாடு­க­ளு­டன் பகிர்ந்துகொள்­வ­தா­க­வும் இது­கு­றித்து மகிழ்ச்சி அடை­வ­தா­க­வும் பிர­த­மர் மோடி கூறி­னார்.

ஜன­நா­யக நடை­மு­றை­க­ளை­யும் அமைப்­பு­க­ளை­யும் தொடர்ந்து மேம்­படுத்த வேண்­டும் என்­றார் அவர்.