பெண்களைக் கவர வாரி வழங்கப்படும் வாக்குறுதிகள்

1 mins read
57eb8c4a-0243-46c7-9c5c-ce073f88e7fe
-

பானாஜி: திரி­ணா­மூல் காங்­கி­ரஸ் ஆட்­சி­ய­மைத்­தால் கோவா­வில் பெண்­க­ளுக்கு மாதந்­தோ­றும் ஐந்­தா­யி­ரம் ரூபாய் வழங்­கப்­படும் என அக்­கட்சி அறி­வித்­துள்­ளது.

இதை­ய­டுத்து கோவா மாநில பெண்­க­ளின் ஆத­ர­வைப் பெறு­வ­தில் அர­சி­யல் கட்­சி­க­ளுக்கு இடை­யே­யான போட்டி சூடுபிடித்­துள்­ளது.

கோவா மாநில அரசு ஏற்­கெனவே 'கிருஹ ஆதார்' என்ற திட்­டத்­தின் கீழ், அம்­மா­நிலப் பெண்­க­ளுக்கு மாதந்­தோ­றும் 1,500 ரூபாய் வழங்கி வரு­கிறது. இதன் மூலம் அம்­மாநிலத்­தில் சுமார் 150,000க்கும் மேற்­பட்ட பெண்­கள் பலன் அடைந்து வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், ஆம் ஆத்மி கோவா­வில் ஆட்­சி­ய­மைத்­தால், இந்­தத் தொகை ரூ.2,500 ஆக அதி­க­ரிக்­கப்­படும் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும், இத்­திட்­டத்­தின் கீழ் வராத 18 வய­துக்கு மேற்­பட்ட பெண்­க­ளுக்கு மாதந்­தோ­றும் 1,000 ரூபாய் வழங்­கப்­படும் என்­றும் வாக்கு­றுதி அளிக்கப்பட்டுள்ளது.

காங்­கி­ரஸ் பொதுச்­செ­ய­லா­ளர் பிரி­யங்கா காந்­தியோ, கோவா­வில் காங்­கி­ரஸ் ஆட்சி அமைத்தால் அம்மா­நிலப் பெண்­க­ளுக்கு வேலை வாய்ப்­பில் 30 விழுக்­காடு இட ஒதுக்­கீடு அளிக்­கப்­படும் என்று அறி­வித்­துள்­ளார்.

இந்­நி­லை­யில், திரி­ணா­மூல் காங்­கி­ர­சும் தன் பங்­குக்கு வாக்­கு­றுதி அளித்­துள்­ளது.

கிரு­ஹ­லட்­சுமி என்ற திட்­டத்­தின் கீழ், கோவா பெண்­க­ளுக்கு பண­வீக்­கத்தை சமா­ளிக்­கும் பொருட்டு, மாதந்­தோ­றும் ஐந்­தா­யி­ரம் ரூபாய் வழங்­கப்­படும் என்­றும் இதன் மூலம் 3.5 லட்­சம் குடும்­பங்­க­ளைச் சேர்ந்த பெண்­கள் பய­ன­டை­வர் என்­றும் அக்­கட்­சி­யின் முக்­கிய தலை­வர்­களில் ஒரு­வ­ரா­ன மஹுவா மொய்த்ரா எம்பி தெரி­வித்­துள்­ளார்.