ஓமிக்ரான் பாதிப்பிலிருந்து ஒன்றரை வயது குழந்தை மீண்டது

ஓமிக்ரான் பாதிப்பிலிருந்து ஒன்றரை வயது குழந்தை மீண்டது

1 mins read
8ce9f870-089a-470e-8b2f-98074df8004b
-

மும்பை இந்­தி­யா­வில் ஓமிக்­ரான் பாதிப்­பில் இருந்து ஒன்­றரை வயதுக் குழந்தை மீண்­டுள்­ளது.

அண்­மை­யில் நைஜீ­ரி­யா­வில் இருந்து ஒரு பெண் தமது இரு பெண் குழந்­தை­க­ளு­டன் மகா­ராஷ்­டிர மாநி­லம், புனே மாவட்­டத்­தில் உள்ள சகோ­த­ர­ரைக் காண வந்­துள்­ளார்.

அவரது சகோ­த­ர­ருக்­கும் இரு பெண் குழந்­தை­கள் உள்­ள­னர். அவற்­றுள் ஒரு குழந்­தைக்கு ஒன்றரை வய­து­தான் ஆகிறது.

இந்­நி­லை­யில், இவர்­கள் ஆறு பேருக்­கும் தொற்­றுக்­கான அறி­கு­றி­கள் தென்­ப­டவே அண்­மை­யில் பரி­சோ­தனை நடத்­தப்­பட்­டது. அதில் அனை­வ­ருக்­கும் ஓமிக்­ரான் பாதிப்பு இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டது.

இதை­ய­டுத்து மருத்­து­வ­மனை­யில் அனு­ம­திக்­கப்­பட்­ட­னர். இவர்­களு­டன் தொடர்­பில் இருந்த மூன்றரை வய­துச் சிறு­வன் உட்­பட மேலும் நான்கு பேருக்­கும் தொற்று பர­வி­யது. எனி­னும் நால்­வ­ரி­டத்­தி­லும் அறி­கு­றி­கள் ஏதும் தென்­ப­ட­வில்லை. நால்­வ­ரும் நல­மாக இருப்­ப­தாக மாந­கர மருத்­துவ அதி­காரி லட்­சு­மண் கோபணே தெரி­வித்­துள்­ளார்.

இந்­நி­லை­யில், சிகிச்­சைக்­குப் பின்­னர் ஒன்­றரை வயது குழந்தை உட்­பட நால்­வர் ஓமிக்­ரான் பாதிப்­பில் இருந்து மீண்­டுள்­ள­தா­க­வும் இரு­வர் மட்­டும் சிகிச்­சை­யில் உள்­ள­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே அண்­மை­யில் பின்­லாந்­தில் இருந்து வந்த ஒரு­வர் ஓமிக்­ரான் பாதிப்­புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலை­யில், அவ­ரும் முழு­மை­யாக குண­ம­டைந்­துள்­ள­தாக மாநகர மருத்துவ அதிகாரி லட்­சு­மண் கோபணே மேலும் கூறினார்.