40 ஆண்டுகளுக்கு முன் மாயமான எட்டாம் நூற்றாண்டு சிலை இந்தியா வருகிறது

2 mins read
7074e8bf-a7e1-4656-b0e4-993d9455adf0
இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வரப்பட உள்ள பெண் தெய்வச் சிலை என இந்திய ஊடகம் வெளியிட்டுள்ள படத்தில் காணப்படும் சிலைகள். (வெவ்வேறு சமயங்களில் எடுக்கப்பட்டவை).படங்கள்: ஊடகம் -

லக்னோ: உத்­த­ரப் பிர­தே­சத்­தில் இருந்து சுமார் நாற்­பது ஆண்­டு­களுக்கு முன்­னர் மாய­மான சிலை இங்­கி­லாந்­தில் கண்­டு­பி­டிக்­கப்­பட்டுள்­ளது. அது எட்­டாம் நூற்­றாண்­டைச் சேர்ந்த பெண் தெய்­வச் சிலை என்று பன்­னாட்டு கலைப்­பொ­ருள்­கள் மீட்பு நிறு­வ­னத்­தின் நிறு­வ­ன­ரான கிறிஸ் மேரி­னெல்லோ தெரி­வித்­துள்­ளார்.

உத்­த­ரப் பிர­தே­சத்­தின் பாண்டா மாவட்­டத்­தில் உள்­ளது லோக்கரி கிராமம். இங்கி­ருந்­துதான் 'யோகினி' என்று குறிப்­பி­டப்­படும் அந்­தப் பெண் தெய்­வச் சிலை கடந்த 1980களின் தொடக்­கத்­தில் மாய­மா­னது.

இந்­நி­லை­யில் பிரிட்­டன் ஊர­கப் பகு­தி­யில் உள்ள ஒரு பங்­களா வீட்­டின் தோட்­டத்­தில் இருந்து இந்­தச் சிலை கண்­டெ­டுக்­கப்­பட்டுள்­ள­தாக கிறிஸ் மேரி­னெல்லோ கூறி­யுள்ளார்.

"அந்த வீட்­டின் உரி­மை­யா­ள­ரான ஒரு மூதாட்டி தனது வீட்­டை­யும் சில விலை மதிப்­பு­மிக்க கலைப் பொருள்­க­ளை­யும் விற்­பனை செய்­தார். அவற்­றுள் யோகினி சிலை­யும் இருந்­தது. 15 ஆண்டு­களுக்கு முன்­னர் தாம் அந்த வீட்டை வாங்­கி­ய­போது, தோட்­டப்­ப­கு­தி­யில் யோகினி சிலை இருந்­த­தா­கக் கூறி­னார்," என்­கி­றார் கிறிஸ் மேரி­னெல்லோ.

இதை­ய­டுத்து தொலைந்­து­போன இந்­திய கலைப்­பொ­ருள்­களை மீட்­கும் பணி­யில் ஈடு­பட்­டுள்ள விஜய்­கு­மா­ரைத் தொடா்பு கொண்­டு பேசி­ய­தா­கக் குறிப்­பிட்­டுள்ள கிறிஸ், அந்­தச் சிலை உத்­த­ரப் ­பி­ர­தே­சத்­தில் காணா­மல் போன சிலை என்­பதை அவர் உறுதி செய்­த­தா­கத் தெரி­வித்­துள்­ளார்.

'இந்­தியா ப்ரைட் பிரா­ஜக்ட்' அமைப்­பின் இணை நிறு­வனா் விஜய்­கு­மார், அந்த அமைப்­பின் மூலம்­தான் இந்­தி­யச் சிலை­களை மீட்டு வரு­கி­றார்.

இந்தத் தக­வல்­களை அறிந்த பிறகு அம்­மூ­தாட்டி யோகினி சிலையைத் தம்­மி­டம் ஒப்­ப­டைத்­துள்­ள­தா­கக் குறிப்­பிட்­டுள்ள கிறிஸ், அதை இந்­தி­யா­வுக்கு அனுப்பி வைப்­ப­தற்­கான நட­வடிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தா­கக் கூறி­யுள்­ளார்.

மிக விரை­வில் யோகினி சிலை இந்­தி­யாவைச் சென்­ற­டை­யும் என இங்­கி­லாந்­தில் உள்ள இந்­திய தூத­ர­கத்­தின் அதி­காரி ஜஸ்ப்­ரீத் சிங் சுகீ­ஜா­வும் தெரி­வித்­துள்­ளார்.