'வெற்றி, தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை'

'வெற்றி, தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை'

1 mins read
2bc4f4ab-e5d4-445d-b361-a50f1779ac4d
-

போபால்: விவ­சா­யி­கள் ஓராண்டு காலம் நடத்­திய போராட்­டத்­தில் யாருக்கு வெற்றி தோல்வி என்ற பேச்­சுக்கே இட­மில்லை என மத்­திய வேளாண் அமைச்­சர் நரேந்­திர சிங் தோமர் தெரி­வித்­துள்­ளார்.

இந்­தப் போராட்­டத்தை யாரும் அத்­த­கைய கோணத்தில் பார்க்கக் கூடாது என்று போபா­லில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசு­கையில் அவர் குறிப்­பிட்­டார்.

விவ­சா­யி­க­ளின் மீது போடப்­பட்ட வழக்­கு­களை திரும்­பப்­பெ­றும் விவ­கா­ரத்­தில் அந்­தந்த மாநில அர­சு­கள்­தான் முடிவு எடுக்க வேண்­டும் என்று தெரி­வித்த அவர், சட்­டம் ஒழுங்கு விவ­கா­ரம் மாநில அர­சு­க­ளின் அதி­கா­ரத்­துக்கு உட்­பட்­டவை எனச் சுட்­டிக்­காட்­டி­னார்.

"வேளாண் சட்­டங்­கள் தொடர்­பான பிர­த­மர் மோடி­யின் முடிவை அனைத்து விவ­சா­யி­களும் வர­வேற்று உள்­ள­னர். இது விவ­சா­யி­க­ளின் மரி­யா­தையை உறுதி செய்­தி­ருக்­கிறது.

"தற்­போது அவர்­கள் போராட்­டத்தை முடித்­துக்­கொண்டு வீடு திரும்பி வரு­கின்­ற­னர்," என்று அமைச்­சர் நரேந்­திர சிங் தோமர் மேலும் கூறி­னார். இதற்­கி­டையே, டெல்லி புற­ந­கர்ப் பகு­தி­யில் முகா­மிட்­டி­ருந்த விவ­சா­யி­கள் நாளை மாலைக்­குள் சொந்த ஊர்­க­ளுக்­குச் சென்­று­வி­டு­வார்­கள் என விவ­சாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.