ஓமிக்ரான்: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38ஆக உயர்வு

புது­டெல்லி: ஓமிக்­ரான் தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் எண்­ணிக்கை 38ஆக கூடி­யுள்­ளது என மத்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

நேற்று முன்­தி­னம் நாக்­பூ­ரில் 40 வயது ஆட­வ­ருக்கு ஓமிக்­ரான் பாதிப்பு உறுதி செய்­யப்­பட்ட நிலை­யில், கேர­ளா­வி­லும் ஒரு தொற்­றுச் சம்­ப­வம் பதி­வா­னது.

லண்டனில் இருந்து எர்­ணா­கு­ளம் வந்த பயணி ஒரு­வ­ருக்கு ஓமிக்­ரான் பாதிப்பு இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டதை அடுத்து அவர் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளார்.

அவ­ரு­டன் விமா­னத்­தில் வந்த 149 பேருக்­கும் கொரோனா பரி­சோ­தனை நடத்­தப்­படும் என அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

நேற்று மாலை நில­வ­ரப்­படி, இந்­தி­யா­வில் அதி­க­பட்­ச­மாக மகா­ராஷ்­டி­ரா­வில் 18 பேரும் ராஜஸ்­தா­னில் ஒன்­பது பேரும் ஓமிக்­ரான் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

டெல்­லி­யில் இரு­வர், குஜ­ராத், கர்­நா­ட­கா­வில் தலா மூவர், ஆந்திரா, கேரளா, சண்­டி­­க­ரில் தலா ஒரு­வருக்கு ஓமிக்­ரான் பாதிப்பு உள்ளது.

இதற்கிடையே, இந்தியாவில் நேற்று முன்தினம் புதிதாக 7,350 பேருக்கு கிருமி தொற்றியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக அன்றாட பாதிப்பு குறைந்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 91,456 ஆக குறைந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!