வழக்கமான விமானச் சேவை எப்போது? இந்திய அமைச்சர் விளக்கம்

ஓமிக்ரான் கிருமி எந்தளவில் பரவுகிறது என்பதைப் பொறுத்தே வழக்கமான அனைத்துலக விமானச் சேவையை மீண்டும் தொடங்க இயலும் என இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பல்வேறு அம்சங்களைக் கவனத்தில்கொள்ள வேண்டியுள்ளது என்றும் விமானப் போக்குவரத்து எப்போது தொடங்கும் என இப்போதே குறிப்பிட்டுச் சொல்ல இயலாது என்றும் அவர் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 14) கூறினார்.

அடுத்த இரு வாரங்களில் நிலவும் சூழ்நிலையைப் பொறுத்தே முடிவெடுக்க இயலும் என்று குறிப்பிட்ட அவர், இது தொடர்பாக சுகாதார அமைச்சுடன் இணைந்து பணியாற்றி வருவதாகத் தெரிவித்தார்.

இந்தியாவில் வழக்கமான அனைத்துலக விமானச் சேவை டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கப்படவிருந்தது.

எனினும், ஓமிக்ரான் திரிபு தலைதூக்கிய நிலையில், ஜனவரி 31ஆம் தேதிவரை விமானச் சேவைகளை நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!