நிபுணர்கள்: பிப்ரவரியில் ஓமிக்ரான் பாதிப்பு அதிகரிக்கும்

நிபுணர்கள்: பிப்ரவரியில் ஓமிக்ரான் பாதிப்பு அதிகரிக்கும்

3 mins read
d97c33de-a326-43a8-b456-89576ad61804
மும்பையில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டுள்ள இவர், மாணவர்கள் மத்தியில் கொரோனா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். படம்: இபிஏ -

ஏழு வயது மேற்கு வங்கச் சிறுவன் உட்பட இதுவரை 64 பேருக்கு பாதிப்பு

புது­டெல்லி: இந்­தி­யா­வில் ஓமிக்­ரான் பாதிப்பு உள்­ள­வர்­க­ளின் எண்­ணிக்கை 64ஆக அதி­க­ரித்­துள்­ளது.

மேற்கு வங்­கத்­தில் ஏழு வய­துச் சிறு­வ­னும் தெலுங்­கா­னா­வில் மூன்று பேருக்­கும் பாதிப்பு இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், அடுத்த மாதம் தொடங்கி பிப்­ர­வரி இறு­திக்­குள் நாடு முழு­வ­தும் ஓமிக்­ரான் பாதிப்பு மிக வேக­மாக அதி­க­ரிக்­கும் என்று நிபு­ணர்­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர்.

மேலும், தொற்­றுப்­ப­ர­வல் வேகம் கொரோ­னா­வில் டெல்டா வகை­யைக் காட்­டி­லும் அதி­க­மாக இருக்­கும் என்று நிபு­ணர்­கள் கூறி­யுள்­ள­தாக டைம்ஸ் ஆஃப் இந்­தியா ஊட­கம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

எனி­னும், லேசான தொற்று அறி­கு­றி­கள் மட்­டுமே காணப்­படும் என்­றும் நிபு­ணர்­கள் தெரி­வித்­துள்ள நிலை­யில், இந்­திய சுகா­தா­ரத்­துறை அதி­கா­ரி­களும் இக்­கூற்றை ஏற்­றுக்­கொள்­வ­தாக அந்த ஊட­கச் செய்தி மேலும் கூறு­கிறது.

இந்­நி­லை­யில், நாட்­டின் குடி­மக்­கள் அனை­வ­ருக்­கும் இரண்டு தடுப்­பூ­சி­க­ளைப் போடு­வதே தங்­க­ளின் முதல் இலக்கு என்று தெரி­வித்­துள்ள சுகா­தா­ரத்­துறை அதி­கா­ரி­கள், இதன் மூலம் கடும் நோய் தாக்­கத்­தில் இருந்­தும் உயி­ரி­ழப்­பில் இருந்­தும் மக்­க­ளைக் காக்க முடி­யும் என்­றும் கூறி­ய­தாக அந்த ஊட­கச் செய்­தி­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந்­தி­யா­வில் அதி­க­பட்­ச­மாக மகா­ராஷ்­டி­ரா­வில் 28 பேருக்கு ஓமிக்­ரான் பாதிப்பு உள்­ளது. ராஜஸ்­தா­னில் 17 பேருக்­கும் டெல்­லி­யில் ஆறு பேருக்­கும் குஜ­ராத்­தில் நான்கு பேருக்­கும் இந்த தொற்று பாதிப்பு கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

தடுப்­பூ­சி­க­ள் செய­லி­ழக்கக்கூடும்

ஓமிக்­ரான் பாதிப்பு அதி­க­ரித்­தால் தடுப்­பூ­சி­க­ளின் ­தி­றன் செய­லி­ழக்­கும் வாய்ப்­புள்­ள­தாக கொரோனா தடுப்­புக் குழு­வின் தலை­வர் வி.கே.பால் எச்­ச­ரித்­துள்­ளார். எனவே, தடுப்பூ­சி­களில் அண்மைய தேவைக்கு ஏற்ப சில மாற்­றங்­க­ளைச் செய்­வது அவ­சி­யம் என்­றும் அதற்கு அனை­வ­ரும் தயா­ராக இருக்க வேண்­டும் என்­றும் அவர் நிகழ்ச்சி ஒன்­றில் பேசு­கை­யில் குறிப்­பிட்­டார்.

"நாம் ஏற்­கெ­னவே உரு­மா­றிய கொரோனா வகை­க­ளைப் பார்த்­துள்­ளோம். அவற்­றால் பாதிக்­கப்­பட்டு மீண்டு வந்­தி­ருக்­கி­றோம். இப்­போது ஓமிக்­ரான் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்தி உள்­ளது. இப்­போது இருக்­கும் தளங்­க­ளைப் பயன்­ப­டுத்தி எவ்­வ­ளவு விரை­வாக மாற்­றங்­க­ளு­டன் கூடிய தடுப்­பூ­சியை உரு­வாக்­கு­கி­றோம் என்­பது முக்­கி­யம்," என்று வி.கே.பால் மேலும் தெரி­வித்­துள்­ளார்.

விமா­னச்­சேவை எப்­போது?

இதற்­கி­டையே, ஓமிக்­ரான் பாதிப்பு எந்­த­ள­வில் பர­வு­கிறது என்­ப­தைப் பொறுத்தே அனைத்­துலக விமா­னச்­சே­வையை மீண்­டும் தொடங்க இய­லும் என மத்­திய விமா­னப் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் ஜோதி­ரா­தித்யா சிந்­தியா தெரி­வித்­துள்­ளார்.

இது தொடர்­பாக பல்­வேறு அம்­சங்­களைக் கவ­னத்­தில் கொள்ள வேண்­டி­யுள்ளது என்­றும் விமானப் போக்­கு­வ­ரத்து எப்­போ­து தொடங்கும் என இப்­போதே குறிப்­பிட்­டுச் சொல்ல இய­லாது என்­றும் அவர் கூறியுள்ளார்.

அடுத்த இரு வாரங்­களில் நில­வும் சூழ்­நி­லை­யைப் பொறுத்தே முடி­வெ­டுக்க இய­லும் என்று குறிப்­பிட்ட அவர், இது தொடர்­பாக சுகா­தார அமைச்­சு­டன் இணைந்து பணி­யாற்றி வரு­வ­தா­கத் தெரி­வித்­தார்.

தமி­ழ­கத்­தில் ஏழு பேருக்கு ஓமிக்ரான் அறி­கு­றி­கள்

இதற்­கி­டையே, தமி­ழ­கத்­தில் ஏழு பேருக்கு ஓமிக்­ரான் பாதிப்­புக்­கு­ரிய அறி­கு­றி­கள் தென்­ப­டு­வ­தாக மக்­கள் நல்­வாழ்வுத் துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

முதற்கட்ட பரிசோதனைகளில் தொற்றுக்கான சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் மரபணு பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே பாதிப்பு குறித்து உறுதி செய்ய முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.