ஆறு மாதங்களில் வருகிறது சிறார்களுக்கான தடுப்பூசி

ஆறு மாதங்களில் வருகிறது சிறார்களுக்கான தடுப்பூசி

1 mins read
77fe886a-183a-40a0-a568-38efab7e2481
-

புது­டெல்லி: அடுத்த ஆறு மாதங்­களில் சிறார்­க­ளுக்­கான தடுப்­பூசி வெளி­யா­கும் என இந்­திய சீரம் நிறு­வ­னத்­தின் தலை­வர் ஆதர் பூன­வாலா தெரி­வித்­துள்­ளார்.

சிறார்­க­ளி­டம் கொரோனா தொற்­றின் தீவிர பாதிப்­பு­களை இது­வரை பார்க்­க­வில்லை என்­பது நிம்­மதி அளிப்­ப­தாக அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"தடுப்­பூ­சி­க­ளால் சிறார்­க­ளுக்கு எந்­த­வித பாதிப்­பும் ஏற்­ப­டாது. அவை பாது­காப்­பா­னவை. அவற்­றின் செயல்­தி­றன் நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது," என்று ஆதர் பூன­வாலா கூறி­யுள்­ளார்.

குழந்­தை­க­ளுக்குத் தடுப்பூசி போட விரும்­பும் பெற்­றோர் அர­சின் அறி­விப்பு வரும் வரை காத்­தி­ருக்க வேண்­டும் என்று குறிப்­பிட்­டுள்ள அவர், குழந்­தை­க­ளுக்­கான கொரோனா தடுப்­பூசி பாது­காப்­பா­னவை என்­பதை உறுதி செய்­வ­தற்கு போது­மான தர­வு­கள் உள்­ளன என்று கூறி­யுள்­ளார்.

நாடு முழு­வ­தும் இது­வரை வயது வந்­தோ­ரில் 55 விழுக்­காட்­டி­ன­ருக்கு இரண்டு தடுப்­பூ­சி­களும் போடப்­பட்­டுள்­ள­தாக மத்­திய சுகா­தார அமைச்­சர் மன்­சுக் மாண்­ட­வியா தெரி­வித்­துள்­ளார்.

இதன் மூலம் கொரோ­னா­வுக்கு எதி­ரான போரில் இந்­தியா மற்­றொரு மைல்­கல்லை அடைந்­துள்­ள­தாக டுவிட்டர் பதிவு ஒன்றில் அவர் கூறி­யுள்­ளார்.