ராகேஷ்: தேர்தல் ஆசையில்லை

ராகேஷ்: தேர்தல் ஆசையில்லை

1 mins read
6759a7cd-7d69-44a1-b660-b633615d0a8c
-

லக்னோ: தேர்­த­லில் போட்­டி­யி­டும் திட்­டம் ஏதும் தமக்கு இல்லை என விவ­சாய சங்­கத் தலை­வ­ரான ராகேஷ் திகாய்த் தெரி­வித்­துள்­ளார்.

அர­சி­யல் கட்­சி­கள் தேர்­தல் களத்­தில் தமது பெய­ரையோ புகைப்­ப­டங்­க­ளையோ பயன்­ப­டுத்த வேண்­டாம் என்­றும் அவர் கேட்­டுக் கொண்­டுள்­ளார்.

புதிய வேளாண் சட்­டங்­களை எதிர்த்து டெல்­லி­யின் புற­ந­கர்ப் பகு­தி­யில் முகா­மிட்டு ஆயி­ரக்­கணக்­கான விவ­சா­யி­கள் கடந்த ஓராண்டுக்­கும் மேலா­கப் போராட்­டத்­தில் ஈடு­பட்­டி­ருந்­த­னர்.

இந்­தப் போராட்­டத்தை நடத்­திய விவ­சாய அமைப்­பு­க­ளுக்கு வழிகாட்­டிய தலை­வர்­களில் ராகேஷும் ஒரு­வர்.

இந்­நி­லை­யில், பாஜ­க­வுக்கு எதி­ராக அவர் தேர்­தல் களம் காண இருப்­ப­தாக ஒரு தக­வல் வெளி­யா­னது. ஆனால் அவர் அதை திட்­ட­வட்­ட­மாக மறுத்­துள்­ளார்.

டெல்லி காவல்­து­றை­யில் காவ­ல­ரா­கப் பணி­யாற்றி வந்த ராகேஷ் திகாய்த், கடந்த 1993ம் ஆண்டு வேலை­யில் இருந்து வில­கி­னார்.

பின்­னர் இரண்டு முறை உத்­த­ரப்­பி­ர­தேச சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் வெவ்வேறு தொகுதிகளில் போட்­டி­யிட்டு தோல்வி கண்­டார்.