பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் குறைந்தன

பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் குறைந்தன

1 mins read
72db3946-c6a8-4eac-9154-67e1c739f5b4
-

புது­டெல்லி: கொரோனா காலக்­கட்­டத்­தில் நாடு முழு­வ­தும் குடும்ப வன்­முறை தொடர்­பான வழக்­கு­க­ள் குறைந்­துள்­ளன.

கடந்த ஆண்டு ஏப்­ரல் முதல் ஜூன் மாதம் வரை 3,748 குடும்ப வன்­முறை வழக்­கு­கள் பதிவு செய்­யப்­பட்­ட­தா­க­வும் நடப்­பாண்­டில் கொரோனா இரண்­டா­வது அலை­யின்­போது, ஏப்­ரல் முதல் ஜூன் மாதம் வரை 3,582 குடும்ப வன்­முறை வழக்­கு­கள்­தான் பதி­வா­கின என்­றும் மத்­திய அரசு தெரி­வித்துள்­ளது.

எனி­னும் பெண்­க­ளுக்கு எதி­ரான குற்ற வழக்­கு­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது. கடந்த 2020ஆம் ஆண்­டில் மட்­டும் சுமார் 370,000 வழக்­கு­கள் பதி­வாகி உள்­ளன.

இது தொடர்­பாக 398,620 பேர் கைதாகி உள்­ள­னர். 488,143 பேர் மீது குற்­றப்­பத்­தி­ரிகை தாக்­கல் செய்­யப்­பட்ட நிலை­யில், 31,402 பேருக்கு தண்­டனை கிடைத்­துள்­ளது.

நகர்ப்­பு­றங்­களில் பெண்­க­ளுக்கு எதி­ரான குற்­றச்செயல்­க­ளின் எண்­ணிக்கை கடந்த 2020ல், முந்­தைய ஆண்­டை­விட 8.3 விழுக்­காடு குறைந்­துள்­ளது.