சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் பயணிகள் சோதனைக்கு முன்பதிவு ெசய்ய வேண்டும்
புதுடெல்லி: இந்தியாவில் 101 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொவிட்-19 கிருமியிலிருந்து உருமாறிய ஓமிக்ரான், 90க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.
இந்த நிலையில் இந்தியாவில் இதுவரை 11 மாநிலங்களில் ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
இந்தியாவில் மொத்தம் 101 பேருக்கு ஓமிரான் தொற்று உறுதி யாகியுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 32, டெல்லியில் 22, ராஜஸ்தானில் 17, கர்நாடகாவில் 8, தெலுங்கானாவில் 8, குஜராத்தில் 5, கேரளாவில் 5 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், தமிழகம், ஆந்திரா, மேற்கு வங்கம், சண்டிகர் ஆகிய மாநிலங்களில் தலா ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஓமிக்ரான் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதற்கிடையே தொற்று ஆபத்து அதிகமுள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகள் 'ஆர்டிபிசிஆர்' பரிசோதனைக்கு முன்பதிவு செய்வது கட்டாயம் என தெரிவிக்கப்பபட்டுள்ளது.
சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், தென்னாப்பிரிக்கா, பிரேசில், ஹாங்காங் உட்பட அதிக பாதிப்புள்ள 12 நாடுகளிலிருந்து வரும் பயணிகள் கட்டாயம் 'ஆர்டிபிசிஆர்' பரிசோதனைக்கு முன்பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளதாக புதிய தலைமுறை கூறியது.
ஓமிக்ரான் வகை கிருமிப் பரவலைக் கருத்தில் கொண்டு முதல் கட்டமாக டெல்லி, மும்பை கொல்கத்தா, சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய ஆறு மெட்ரோ நகரங்களில் இதனை செயல்படுத்த மத்திய விமானப் போக்குவரத்துத் துறை திட்டமிட்டுஉள்ளது.
அனைத்து விமான நிறுவனங்களுக்கும் தங்கள் பயணிகளை விமானத்தில் ஏற்றுவதற்கு முன்பு கட்டாயமாக முன்பதிவு செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்கப் பட்டுள்ளளது.
முன்பதிவு செய்வதில் பயணி களுக்கு ஏதேனும் சிரமம் இருந்தால் அவர்கள் ஏறுவதற்கு மறுக்கப்பட மாட்டார்கள். அத்தகைய பயணி களைக் கண்டறிந்து, பரிசோதனைக்காக விமான நிலையத்தில் உள்ள பதிவு முகப்புகளுக்கு அழைத்துச் செல்வது விமான நிறுவனங்களின் பொறுப்பு என்று அமைச்சு கூறியுள்ளது.

