'சில முடிவுகள் தவறு'

'சில முடிவுகள் தவறு'

1 mins read
22b8e7ec-b9dd-44df-9b55-9f4c7c848015
-

புது­டெல்லி: கடந்த ஏழு ஆண்­டு­களில் ஒரு இடத்­தில் கூட ஊழல் என்­பதை மக்­கள் கண்­டி­ருக்க முடி­யாது. நாங்­கள் ஓரிரு தவறான முடி­வு­களை எடுத்­தி­ருக்­க­லாம். அந்த முடி­வு­கள் தவ­றா­ன­தாக இருந்­தா­லும் எங்­கள் நோக்­கம் தவறு என விமர்­ச­கர்­கள்கூட விமர்­சித்­தது இல்லை என்று இந்­திய வர்த்­தக மற்­றும் தொழில்­துறை கூட்­ட­மைப்­பின் ஆண்டு பொதுக்­கூட்­டத்­தில் ேபசிய உள்­துறை அமைச்சர் அமித் ஷா தெரி ­வித்­தார்.

"எங்­கள் அரசு பொரு­ளா­தா­ரத்­தில் மிகப்­பெ­ரிய மாற்­றத்தை கொண்டு வந்­துள்­ளது. நம் நாடு சுதந்­தி­ரம் அடைந்­த­தில் இருந்து வளர்ச்சி திட்­டங்­கள் எது­வும் சென்­ற­டை­யாத 60 கோடி மக்­க­ளுக்கு நாங்­கள் வளர்ச்­சியை கொண்டு சென்­றுள்­ளோம். அந்த 60 கோடி மக்­களும் இது­வரை வங்கிக் கணக்கு, மின்­சார இணைப்பு, அடிப்­படை மருத்­துவ வசதி எது­வும் கிடைக்­கப்­பெ­றா­த­வர்­கள்.

"மோடி அர­சாங்­கம் அவர் ­களுக்கு அனைத்­தை­யும் தந்து ஜன­நா­ய­கத்­தின் மீது நம்­பிக்­கையை கொண்டு வந்­துள்­ளது. பிர­த­மர் மோடி­யின் ஆளு­மை­யா­லும் 130 கோடி மக்­க­ளின் பங்­க­ளிப்­பா­லும் கொரோனா பெருந்­தொற்று கட்­டுக்­குள் வந்­தது. பொரு­ளா­தா­ரம் அதி­வே­க­மாக முன்­னே­றிக்­கொண்­டி­ருக்­கிறது. உற்­பத்தி மற்­றும் ஏற்­று­மதி ஆகி­யவை அதி­க­ரித்­துள்­ளது," என்று அமித் ஷா ேமலும் தெரி­வித்­தார்.