நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

1 mins read
e0717845-0fc6-48e0-992b-2de947ed2e5a
-

புது­டெல்லி: நாடா­ளு­மன்ற குளிர் கால கூட்­டத்­தொ­டர் நவம்­பர் 29ஆம் தேதி தொடங்கி டிசம்­பர் 23ஆம் தேதி வரை நடை­பெற்று வரு­கிறது. ஆரம்­பத்­தில் இருந்தே இரு அவை­க­ளி­லும் 12 எம்.பி.க்கள் இடை­நீக்­கம் உள்­ளிட்ட கார­ணங்­க­ளுக்­காக எதிர்க்­கட்சி யினர் அம­ளி­யில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். மேலும், லக்­கிம்­பூர் விவ­சா­யி­கள் கொல்­லப்­பட்ட விவ­கா­ரத்­தில் மத்­திய அமைச்­சர் அஜய் மிஸ்­ராவை பதவி நீக்­கம் செய்­யக் கோரி அம­ளி­யில் ஈடு­பட்­ட­தால் நேற்று முன்­தி­னம் முழு வதும் அவை­கள் செயல்­ப­டா­மல் ஒத்தி வைக்­கப்பட்­டது. தொடர்ந்து நேற்று காலை அவை­கள் கூடி­யதிலிருந்து எதிர்­க்கட்­சி­யி­னர் அமளியில் ஈடு­பட்­ட­னர். இதை­ய­டுத்து மாநி­லங்­க­ளவை திங்­கள்­கி­ழமை காலை வரை ஒத்­தி­வைக்­கப்­பட்ட நிலை­யில், மக்­க­ளவை பிற்­ப­கல் 2 மணி வரை ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

பிற்­ப­க­லி­லும் எதிர்­க்கட்சி உறுப்­பி­னர்­க­ளின் தொடர் அமளி தொடர்ந்­த­தால் மக்­க­ள­வை­யும் திங்­கள்­கி­ழமை வரை ஒத்­தி­வைக்கப்­பட்­டது.