தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

4 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவும் இஸ்ரோ; ரூ. 1,140 கோடி ரூபாய் வருமானம்

2 mins read
dd9ab88e-7042-4633-9fb8-40df4e576eaf
-

சென்னை: நான்கு நாடு­க­ளின் சார்­பில் நான்கு செயற்கைக் கோள்­கள் விண்­ணுக்­குப் பாய்ச்­சப்­படும் என்று மத்­திய அறி­வி­யல் மற்­றும் தொழில்­நுட்­பம், பிர­த­மர் அலு­வ­லக இணை­ய­மைச்­சர் ஜிதேந்­திர சிங் தெரி­வித்­துள்­ளார்.

இதன் மூலம் நாட்­டுக்கு 1,140 கோடி ரூபாய் வரு­மா­னம் கிடைக்­கும் என்றார் அவர்.

இதற்­காக 2021-2023 ஆண்­டு ­க­ளுக்கு இடையே நான்கு நாடு­ க­ளின் செயற்­கைக்­கோள்­களை விண்­ணுக்கு அனுப்ப இந்­திய விண்­வெளி ஆராய்ச்சி மையம் ஒப்­பந்­தம் செய்­துள்­ள­தா­க­வும் அமைச்­சர் தெரி­வித்­தார். நாடா­ளு­மன்­றத்­தில் எழுப்­பப்­பட்ட கேள்வி ஒன்­றுக்கு அவர் எழுத்­துப்­பூர்­வ­மாக அளித்த பதி­லில் இது தெரி­விக்­கப்­பட்­டது.

"வணிக ரீதி­யில் வெளி­நாட்டு செயற்­கைக்­கோள்­களை விண்­ணில் ஏவு­வ­தன் மூலம் 132 மில்­லி­யன் யூரோ வரு­மா­னம் (இந்­திய மதிப்­பில் ரூ. 1,140 கோடி) இந்­திய அர­சுக்கு கிடைக்­கும்.

"இந்­திய விண்­வெளி துறை­யின் கீழ் இயங்­கும் இஸ்­ரோ­வின் வணி­கப் பிரி­வான 'நியூ ஸ்பேஸ் இந்­தியா லிமி­டெட்' வணிக ரீதி­யில் வெளி­நாட்டு செயற்­கைக்­கோள்­களை பி.எஸ்.எல்.வி. உந்­து­கணை மூலம் அனுப்பி வரு­கிறது. 1999ஆம் ஆண்டு முதல் இது­வரை 34 நாடு­ க­ளின் 342 செயற்­கைக்­கோள்­கள் பி.எஸ்.எல்.வி. உந்­து­கணை மூலம் வணிக ரீதி­யில் ஏவப்­பட்­டுள்­ளன.

"மாண­வர்­கள் தயா­ரித்த 12 செயற்­கைக்­கோள்­கள் உள்­பட 124 உள்­நாட்டு செயற்­கைக்­கோள்­கள் புவிவட்ட சுற்­றுப் பாதை­யில் நிலை­நி­றுத்­தப்­பட்­டுள்­ளன. "இந்­திய உந்து கணைகள் மூல­மாக வெளி­நாட்டு செயற்­கைக்­கோளை விண்­ணில் ஏவு­வ­தன் மூலம் 2019-2021 வரை­யி­லான மூன்று ஆண்­டு­களில் இந்திய அரசு, அந்­நிய செலா­வ­ணி ­யாக 35 மில்­லி­யன் யுஎஸ் டாலர் மற்­றும் 10 மில்­லி­யன் யூரோவை வரு­மா­ன­மாக பெற்­றுள்­ளது," என்று அமைச்­சர் தெரி­வித்­தார்.