பெண் நீதிபதிக்கு பதவி உயர்வு ரத்து

பெண் நீதிபதிக்கு பதவி உயர்வு ரத்து

1 mins read
25436234-3a49-449d-a0ce-117a6c2474fb
நீதிபதி புஷ்பா வழங்கிய தீர்ப்பை ஊடகங்கள் பெரிதுபடுத்தி இருப்பதாக அவரது தரப்பினர் கூறுகின்றனர். கோப்புப் படம்: தமிழக ஊடகம் -

புது­டெல்லி: சிறுமி மீதான பாலி­யல் அத்­து­மீ­றல் தொடர்­பான வழக்­கில் சர்ச்­சைக்­கு­ரிய தீர்ப்பு அளித்த மும்பை உயர் நீதி­மன்ற பெண் நீதி­பதி புஷ்பா கனே­டி­வா­லாவை நிரந்­தர நீதி­ப­தி­யாக நிய­மிக்க 'கொலீ­ஜி­யம்' மீண்­டும் மறுத்­துள்­ள­தாக தமி­ழக ஊட­க­மான தின­ம­லர் வெளி­யிட்ட தக­வல் தெரி­வித்­தது.

மஹா­ராஷ்­டிர மாநி­லம் மும்பை உயர் நீதி­மன்ற பெண் நீதி­பதி புஷ்பா கனே­டி­வாலா இந்­தாண்டு ஜன­வ­ரி­யில் 'போக்சோ' சட்ட வழக்­கில் அளித்த தீர்ப்பு சர்ச்­சையைக் கிளப்­பி­யது.

"ஆடை­க­ளு­டன் உள்ள சிறு­மி­யின் மார்­ப­கத்­தைத் தொடு­வது குற்­ற­மா­காது. உட­லு­டன் உடல் தொடர்பு இருந்­தால் மட்­டுமே குற்­ற­மா­கும்," என்று தனது தீர்ப்­பில் அவர் குறிப்­பிட்­டார். இதே போன்று மற்­றொரு போக்சோ சட்ட வழக்­கி­லும் சர்ச்­சைக்­கு­ரிய தீர்ப்பு வழங்­கி­னார்.

இவர் வழங்­கிய தீர்ப்­பு­க­ளுக்கு உச்ச நீதி­மன்­றம் தடை விதித்­துள்­ளது.

உயர் நீதி­மன்ற தற்­கா­லிக நீதி ­ப­தி­யாக உள்ள அவரை, நிரந்­தர நீதி­ப­தி­யாக்­கு­வ­தற்கு ஏற்­கெ­னவே உச்ச நீதி­மன்ற தலைமை நீதி­பதி என்.வி. ரமணா தலை­மை­யி­லான 'கொலீ­ஜி­யம்' பரிந்­துரை செய்­தி­ருந்­தது.

ஆனால் அவ­ரது சர்ச்­சைக்­கு­ரிய தீர்ப்­பு­களால் கொலீ­ஜி­யம் தனது பரிந்­து­ரையை திரும்­பப் பெற்­றுக் கொண்­டது. இரண்­டா­வது முறை­யாக அவரை நிரந்­தர நீதி­ப­தி­யாக்க கொலீ­ஜி­யம் மறுத்­துள்­ளது. பிப்­ர வரி­யில் அவ­ரது பத­விக் காலம் முடி­வுக்கு வரு­கிறது. அதன் பின் அவர் மீண்­டும் மாவட்ட நீதி­ப­தி­யாக நிய­மிக்­கப்­ப­டு­வார் எனத் தெரி­கிறது.