இட ஒதுக்கீட்டில் நேர்மை இல்லை: மோடியை சாடிய நாடாளுமன்றக் குழு

இட ஒதுக்கீட்டில் நேர்மை இல்லை: மோடியை சாடிய நாடாளுமன்றக் குழு

1 mins read
5f0db568-38e7-49f7-ab14-b50ed076c574
-

லக்னோ: இட ஒதுக்­கீட்டை அமல்­படுத்­து­வ­தில் பிர­த­மர் மோடி நேர்மை­யா­கச் செயல்­ப­ட­வில்லை என தாழ்த்­தப்­பட்­டோர், பழங்­கு­டி­யி­னர் நல­னுக்­கான நாடா­ளு­மன்ற நிலைக்­குழு சாடி­யுள்­ளது.

இக்­கு­ழு­வுக்கு அக­ம­தா­பாத் மேற்கு தொகுதி பாஜக எம்.பி. கிரித் பிரேம்­ஜி­பாய் சோலான்கி தலைமை வகிக்­கி­றார்.

இந்­நி­லை­யில் தொலைத்­தொடர்பு நிறு­வ­ன­மான பிஎஸ்­என்­எல் அண்மை­யில் சிலரை பணி­யில் சேர்த்­தி­ருப்­ப­தா­க­வும் அதில் இட ஒதுக்­கீட்டு முறை பின்­பற்­றப்­ப­ட­வில்லை என்­றும் அந்­தக் குழு குற்றம்­சாட்டி உள்­ளது.

அதில் உள்ள 30 எம்­பிக்­களில் பாஜ­க­வி­னரே அதி­கம் இடம்­பெற்­றுள்­ள­னர் என்­ப­தால் அக்­கட்சி வட்­டா­ரங்­களில் சல­ச­லப்பு நில­வு­கிறது.

"பிஎஸ்­என்­எல் ஒப்­பந்­த­தா­ரர்­கள் மூலம் சில பணி­யாட்­களை நிய­மித்து வரு­கிறது. இருந்­தா­லும் பிஎஸ்­என்­எல்­தான் முதன்­மைப் பணி வழங்­கு­நர் என்ற அடிப்­ப­டை­யில் இட ஒதுக்­கீட்­டைச் செயல்­ப­டுத்த வேண்­டும்.

"ஓர் அர­சாங்­க­மா­னது ஒடுக்­கப்­பட்ட மக்­க­ளுக்­காக இட ஒதுக்­கீட்டை நேர்­மை­யா­கச் செயல்­ப­டுத்த வேண்­டும். அது, நேர­டிப் பணி நிய­ம­ன­மாக இருந்­தா­லும் சரி, ஒப்­பந்­த­தா­ரர்­கள் மூலம் வழங்­கப்­படும் வேலை­யாக இருந்­தா­லும் சரி, இட ஒதுக்­கீட்டை முறையாக உறுதி செய்ய வேண்­டும்," என்றும் அந்­தக் குழு பரிந்­து­ரைத்­துள்­ளது.

இதற்­கி­டையே பிஎஸ்­என்எல் நிர்வாகம் இது தொடர்பாக அளித்த விளக்­கத்­தில், ஒப்­பந்த­தா­ரர்­கள் பணி­யா­ளர்­க­ளைப் பணி­ய­மர்த்­தும்­போது இட ஒதுக்­கீட்டு வழி­மு­றை­க­ளைப் பின்­பற்றி ஆட்­க­ளைப் பணி­ய­மர்த்த வேண்­டும் என்றும் எந்­த­வித உத்­த­ர­வை­யும் பிறப்­பிப்­ப­தில்லை என்றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.