இந்திய அழகி உட்பட 16 அழகிகளுக்குத் தொற்று

1 mins read
7159a64d-bdf7-4b90-8a48-d01099b2769a
-

புது­டெல்லி: உலக அழ­கிப் போட்டி­யில் பங்­கேற்க இருந்த 16 அழகி­களுக்கு கொரோனா தொற்­றுப் பாதிப்பு இருப்­பது உறு­தி­யா­னதை அடுத்து, அந்­தப் போட்டி தள்ளி வைக்­கப்­பட்­டது. பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் இந்­திய அழகி மானசா வார­ணா­சி­யும் (படம்) ஒரு­வர் ஆவார்.

அண்­மை­யில் பிர­பஞ்ச அழகிப்­போட்டி நடந்து முடிந்­துள்­ளது. இதை­ய­டுத்து 2021ஆம் ஆண்­டுக்­கான உலக அழ­கிப் போட்டி அமெ­ரிக்­கா­வின் போர்ட்டோ ரிக்­கோ­வில் நடை­பெற இருந்­தது.

இதற்­கான ஏற்­பா­டு­கள் அனைத்­தும் தயார் நிலை­யில் இருந்த வேளை­யில், இப்­போட்­டி­யில் பங்­கேற்க இருந்த அழ­கி­களுக்கு கிருமி தொற்­றி­யுள்­ளது.

இதை­ய­டுத்து அவர்­கள் அனை­­வ­ரும் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர். அவர்­க­ளுக்கு உரிய சிகிச்சை அளிக்­கப்­ப­டு­வ­தாக ஏற்­பாட்­டா­ளர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

அடுத்த 90 நாள்­களில் இறு­திப்­போட்டி போர்ட்டோ ரிக்­கோ­வி­லேயே வேறு இடத்­தில் நடத்­தப்­படும் என்றும் அவர்­கள் கூறி­யுள்­ள­னர்.

இது தொடர்­பாக வெளி­யி­டப்­பட்ட அதி­கா­ர­பூர்வ அறிக்­கை­யில், சுகா­தார அதி­கா­ரி­கள், நிபு­ணர்­க­ளு­டன் கலந்­தா­லோ­சித்த பிறகு இறு­திப்­போட்­டியை ஒத்திவைக்­கும் முடிவு எடுக்­கப்­பட்­ட­தாக ஏற்­பாட்­டா­ளர்­கள் மேலும் தெரி­வித்­துள்­ள­னர்.