வடமாநிலங்களில் கடுங்குளிர்

வடமாநிலங்களில் கடுங்குளிர்

2 mins read
37c20afb-0ae1-4d74-ba35-485d03b5c006
இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளில் நிலவி வரும் கடுங்குளிரும் பனிப்பொழிவும் இன்னும் மூன்று நாட்களுக்குத் தொடரும் என்று கூறப்படுகிறது. படம்: ராய்ட்டர்ஸ் -

புது­டெல்லி: இந்­தி­யா­வின் உத்­தரப் பிர­தே­சத்தின் மேற்குப் பகுதி, டெல்லி, உத்­த­ர­காண்ட், இமாச்­சலப் பிர­தே­சம், பஞ்­சாப், ஹரி­யானா ஆகிய மாநி­லங்­களில் கடு­மை­யான குளிர்க்காற்றும் பனிப்பொழிவும் நிலவி வரு­கிறது. மேலும், பனி­மூட்­டம் கார­ண­மாக மக்­கள் வீட்­டுக்­குள் முடங்­கிக்­கி­டக்­கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. ராஜஸ்­தான் உள்­ளிட்ட சில மாநி­லங்­களில் வெப்­ப­நிலை மைனஸ் டிகி­ரியை தொட்­ட­தால் மக்­கள் கடுங்­கு­ளி­ரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு ராஜஸ்­தான் மாநி­லத்தின் சுரு என்ற இடத்­தில் நேற்று முன்தினம் -3.3 டிகி­ரி­யாக வெப்­ப­நிலை பதி­வா­கி­யுள்­ளது.

இமாச்­சலப் பிர­தே­சம், ஹரி­யானா, சண்­டி­கார், டெல்லி, மேற்கு உத்­தரப் பிர­தே­சத்­தில் பெரும்­பா­லான இடங்­க­ளில -1.6 டிகிரி முதல் -3.0 டிகிரி வரை பதி­வா­கி­யுள்­ள­தாக தேசிய வானிலை மையம் தெரி­வித்­துள்­ளது.

ஸ்ரீந­க­ரி­லும், காஷ்­மீ­ரி­லும் வெப்­ப­நிலை பூஜ்ய டிகிரி நிலைக்­கும் குறை­வாக வெள்­ளிக்­கி­ழமை இரவு பதி­வா­னது. இத­னால் தண்ணீா் விநி­யோ­கிக்­கும் குழாய்­களும் நீா்நிலை­களும் உறைந்து போயின.

காஷ்­மீ­ரில் அடுத்த சில நாள்­களுக்கு கடு­மை­யான குளிா் நீடிக்­கும் என வானிலைத்துறை தெரி­வித்­துள்­ளது. குறிப்­பாக கிறிஸ்­து­மஸை­யொட்டி, டிசம்பா் 23 முதல் டிசம்பா் 25 வரை கடு­மை­யான குளிா் நில­வும் எனக் கூறப்­ப­டு­கிறது. அமிர்­த­ச­ர­ஸில் ஒரு டிகிரி செல்­சி­யஸ் வெப்­ப­நிலை பதி­வானது. இமாச்­ச­லப் பிர­தே­சத்­தின் லஹால் ஸ்பிட்டி என்­னும் இடத்­தில் உள்ள சிஸ்ஸு ஏரி உறைந்து காணப்­ப­டு­கிறது. அங்கு வெப்­ப­நிலை மைனஸ் ஜீரோ­வைத் தொட்­டுள்­ளது. போபால் உள்­ளிட்ட பல பகு­தி­களில் கடந்த வெள்ளி, சனிக்­கி­ழ­மை­களில் கடு­மை­யாக குளிர்க்­காற்று வீசி­ய­தா­க­வும் அங்கு குறைந்­த­பட்ச வெப்­ப­நிலை 4 டிகி­ரி­யா­கப் பதி­வா­ன­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.