போர்ட் பிளேர்: "கோவிஷீல்டை மட்டும் பயன்படுத்தி 100 விழுக்காடு கொரோனா தடுப்பூசி இலக்கை எட்டிய முதல் மாநிலம்/யூனியன் பிரதேசம் என்ற பெருமையைப் பெற்றுள்ளோம். உலகின் தொலைதூரப் பகுதிகளில் ஒன்றாக உள்ள அந்தமான் மற்றும் நிக்கோபார், அசாதாரண சாதனைக்காக கடக்க முடியாத முரண்பாடுகளை முறியடித்துள்ளது," என அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் நிர்வாகத்தின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. நாட்டின் மற்ற பகுதிகளைப் போலவே, அந்தமான் தீவுகளிலும் இந்தாண்டு ஜனவரி மாதம்தான் தடுப்பூசி விநியோகம் தொடங்கப்பட்டது. 100 விழுக்காடு இலக்கு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், "2.86 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போட வேண்டும் என்ற இலக்கை கடந்து 2.87 லட்சம் பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன் மூலம், 100.41 விழுக்காட்டினருக்கு பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தீவுகளின் மக்கள் தொகையில் 74.67 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
ஒரே ஒருவருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளதையடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமையன்று 7,701 ஆக உயர்ந்துள்ளது," எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

