இரண்டு அரசியல் கொலைகள்; கேரளாவில் பதற்றம்

இரண்டு அரசியல் கொலைகள்; கேரளாவில் பதற்றம்

2 mins read
d6c50544-8adf-4f52-8cdb-96a002901b37
கேர­ளா­வின் ஆலப்­புழா மாவட்­டத்­தில் 12 மணி நேரத்­தில் இரண்டு அர­சி­யல் தலை­வர்­கள் படு­கொலை செய்­யப்­பட்­டதை அடுத்து அங்கு ஊர­டங்கு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது. அத­னை­ய­டுத்து மாவட்­டத்­தின் முக்­கிய பகு­தி­களில் காவல்­து­றை­யி­னர் சோதனை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர். படம்: இணை­யம் -

திருவனந்தபுரம்: கேரள மாநி­லத்­தில் ஆலப்­பு­ழா­வில் பாஜக மற்­றும் எஸ்­டி­பிஐ கட்­சி­யைச் சேர்ந்த இரண்டு பிர­மு­கர்­கள் கொலை செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

இந்­திய சமூக ஜன­நா­யக கட்­சி­யின் (எஸ்­டி­பிஐ) மாநி­லச் செய­லா­ளர் கே.எஸ்.ஷான், நேற்று முன்­தி­னம் ஆலப்­பு­ழா­வில் இரண்டு சக்­கர வாக­னத்­தில் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய போது எதிரே வந்த வாகனம் ஒன்று அவரை மோதித் தள்ளியது.

அவரது வீட்டின் அருகே நடந்த இந்தச் சம்பவத்தில் கடுமையாகக் காயமடைந்த அவர் கொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். அவரை மோதித் தள்ளியவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இது விபத்து அல்ல; தாக்குதல் என்று எஸ்டிபிஐ கட்சி கூறியுள்ளது.

இந்த தாக்­கு­தலை, பாஜ­க­வின் தாய் அமைப்­பான ஆர்­எஸ்­எஸ் நடத்­தி­யுள்­ள­தாக எஸ்­டி­பிஐ குற்­றம்­சாட்­டி­யுள்­ளது. கே.எஸ்.ஷானை ஆர்.எஸ்.எஸ். உறுப்­பி­னர்­கள் கொலை செய்­து­விட்­ட­தாக எஸ்.டி.பி.ஐ தலை­வர் எம்.கே. ஃபைசி குற்­றம் சாட்­டி­னார்.

இந்­நி­லை­யில், பா.ஜ.க.வின் ஒபிசி மோர்ச்சா செய­லா­ளர் ரஞ்­சித் சீனி­வா­சனை ஆலப்­பு­ழா­வில் உள்ள அவ­ரது வீட்­டில் நேற்றுக் காலை அடை­யா­ளம் தெரி­யாத சிலர் வெட்­டிக் கொன்­ற­னர். கே.எஸ். ஷான் இறந்த மறு­நாளே பார­திய ஜனதா கட்­சித் தலை­வர் ரஞ்­சித் கொலைச் சம்­ப­வம் அரங்­கே­றி­யுள்­ள­தால் இது பழி­வாங்­கும் நோக்­கத்­தி­னால் நடந்­தி­ருக்­க­லாம் என்று கரு­தப்­ப­டு­கிறது. எனவே, அசம்­பா­வி­தங்­கள் மேலும் தொட­ரா­மல் இருக்­கும் வகை­யில் ஆலப்­பு­ழா­வில் 144 தடை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

"இந்த அர­சி­யல் கொலை­க­ளைக் கண்­டித்­துள்ள அம்­மா­நில முதல்­வர் பின­ராயி விஜ­யன், இத்­த­கைய கொடூ­ர­மான, மனி­தா­பி­மா­ன­மற்ற வன்­மு­றைச் செயல்­கள் கண்­டிக்­கத்­தவை. இது­கு­றித்து காவல்­துறை விசா­ரணை மேற்­கொண்­டு­வ­ரு­கின்­ற­னர். குற்­ற­வா­ளி­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்டு அவர்­கள் மீது கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்," என்று கூறி­னார்.