பெங்களூருவில் சிவாஜி சிலை அவமதிப்பு; பெலகாவியில் வன்முறை; 27 பேர் கைது

பெங்களூருவில் சிவாஜி சிலை அவமதிப்பு; பெலகாவியில் வன்முறை; 27 பேர் கைது

2 mins read
c0126776-fb91-429b-912b-5a91632a7a61
-

பெல­காவி: பெல­காவி சுவர்ண சவு­தா­வில் கர்­நா­டக சட்­ட­ச­பை­யின் குளிர்­கால கூட்­டத்­தொ­டர் கடந்த 13-ந் தேதி தொடங்­கி­யது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரி­வித்து மராட்­டி­யத்தைச் சேர்ந்த எம்.இ.எஸ்.(மராட்­டிய ஏகி­கி­ரண் சமிதி) அமைப்பு போராட்­டம் நடத்­தி­யது. அப்­போது எம்.இ.எஸ். அமைப்­பின் மூத்த தலை­வர் மீது கன்­னட அமைப்­பி­னர் கறுப்பு மையைப் பூசி­னர். இந்த சம்­ப­வம் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி இருந்­தது.

இதற்­கி­டையே பெல­கா­வி­யில் சட்­ட­சபை குளிர்­கால கூட்­டத்­தொ­டர் நடத்த எதிர்ப்பு தெரி­வித்து மராட்­டிய மாநி­லம் கோலாப்­பூ­ரில் எம்.இ.எஸ். தொண்­டர்­கள், கன்­னட கொடியை எரித்­த­னர். இதற்கு கர்­நா­ட­கத்­தில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருந்­தது. எம்.இ.எஸ். அமைப்பைக் கண்­டித்து கர்­நா­ட­கத்­தில் கன்­னட அமைப்­பி­னர் போராட்­டம் நடத்தி வந்­த­னர். இந்த நிலை­யில் பெங்­க­ளூ­ரு­வில் உள்ள சிவாஜி சிலை மீது கன்­னட அமைப்­பி­னர் கறுப்பு மை பூசி அவ­ம­தித்­த­னர். இதை கண்­டித்து நேற்று முன்­தி­னம் பெல­கா­வி­யில் எம்.இ.எஸ். அமைப்­பி­னர் போராட்­டம் நடத்­தி­னர். இதை­யடுத்து எம்.இ.எஸ். அமைப்­பி­னர் மீது காவல்­து­றை­யி­னர் தடி­யடி நடத்தி விரட்­டி­னர்.

இந்த நிலை­யில் பெல­கா­வி­யில் கர்­நா­டக அர­சுக்குச் சொந்­த­மான 6 கார்­கள், 6 காவல்­துறை வாக­னங்­கள் உள்­பட 26 வாக­னங்­கள் அடித்து நொறுக்­கப்­பட்­டன. அதில் காவல்­துறை வாக­னம் ஒன்று தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டது. அங்­குள்ள சங்­கொள்ளி ராயண்­ணா­வின் சிலை­யின் கையில் வைக்­கப்­பட்டு இருந்த வாள், கேட­யத்தை சிலர் சேதப்­ப­டுத்­தி­னர். வன்­மு­றை­யில் ஈடு­பட்­ட­வர்­களை அதி­கா­ரி­கள் கண்­கா­ணிப்­புக் கரு­வி­க­ளின் பதிவுகள் மூலம் அடையாளம் கண்டனர். அவர்கள் அனைவரும் எம்­இ­எஸ் இந்து அமைப்­பைச் சேர்ந்­த­வர்­கள் என்­பது உறு­தி­யா­னது. ஸ்ரீராம சேனை இந்­துஸ்­தான் அமைப்­பின் தலை­வர் ராம­கந்தா, மற்­றும் மராட்­டிய அமைப்­பி­னர் உள்­பட 27 பேர் கைது­செய்­யப்­பட்­ட­னர். அவர்­களை 14 நாட்­கள் நீதி­மன்ற காவ­லில் வைத்து விசா­ரிக்க நீதி­பதி உத்­த­ர­விட்­டார்.