புதுடெல்லி: நாட்டின் பாதுகாப்பு கருதி ஆயுதங்கள், ராணுவ தளவாடங்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நட்பு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிடம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்தியாவுக்குத் தேவையான ராணுவ தளவாடங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பதை நட்பு நாடுகளுக்கு இந்தியா தெளிவாக உணர்த்தியுள்ளது.
வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதி செய்யுங்கள் என கூறியுள்ளோம். இதை நட்பு நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
நட்பு நாடுகள் இந்தியாவில் கூட்டாக ஆலை அமைப்பது அல்லது தனிப்பட்ட முறையில் ஆலை அமைப்பதை இந்தியா வரவேற்கிறது.
ஆனால் ராணுவ தளவாடங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
கடந்த ஆண்டு மே மாதம் ராணுவம் சார்ந்த உற்பத்தியில் அந்நிய முதலீட்டு வரம்பை 49 விழுக்காட்டில் இருந்து 74 விழுக்காடாக இந்தியா உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

