விசாரணைக்கு முன்னிலை ஆனார் ஐஸ்வர்யா ராய்

விசாரணைக்கு முன்னிலை ஆனார் ஐஸ்வர்யா ராய்

1 mins read
a4cb7733-3bee-4345-8d82-82a17b864b88
-

மும்பை: 'பனாமா பேப்­பர்ஸ்' ஊழல் வழக்கு தொடர்­பான விசா­ர­ணைக்­காக நடிகை ஐஸ்­வர்யா ராய் நேற்று அம­லாக்­கப் பிரிவு அலு­வ­ல­கத்­தில் நேரில் முன்­னி­லை­யா­னார்.

'பனாமா பேப்­பர்ஸ்' என்ற தலைப்­பில் கடந்த 2016ஆம் ஆண்டு உலக அள­வில் சட்­ட­வி­ரோ­த­மாக சொத்­து­க­ளைப் பதுக்­கிய, வாங்­கிய ஏரா­ள­மான பிர­மு­கர்­கள் பற்­றிய தக­வல்­கள் வெளி­வந்­தன.

பனாமா நாட்­டைச் சேர்ந்த மொசாக் பொன்­சேகா சட்ட நிறு­வ­னத்­தின் ரக­சிய ஆவ­ணங்­களில் இருந்து இந்­தத் தகவல்­கள் திருடப்­பட்­டன.

இந்த தக­வல் கசிவு மூலம் உலக அள­வில் பல தலை­வர்­கள் பத­வி­களை இழக்க நேரிட்­டது. பல பிர­ப­லங்­கள் ஊழல் வழக்­கு­களில் சிக்­கி­யுள்­ள­னர்.

இந்­நி­லை­யில், நடிகை ஐஸ்­வர்யா ராய் பச்­சன், நடி­கர் அமி­தாப் பச்­சன் ஆகி­யோ­ரும் வரி ஏய்ப்பு செய்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இது­கு­றித்து விசா­ரணை நடத்த மத்­திய அம­லாக்­கப் பிரிவு ஐஸ்­வர்யா ராய்க்கு சம்­மன் அனுப்­பி­யது. அதை ஏற்று நேற்று மும்பை அம­லா­க்­கப் பிரிவு அலு­வ­ல­கத்­தில் அவர் நேரில் முன்­னி­லை­யா­னார்.