வங்கிக் கடன் மோசடி: ரூ.13,109 கோடி தொகை மீட்கப்பட்டது

1 mins read
66030444-7c62-49aa-9cc3-4e82afaa368f
(இடமிருந்து) நீரவ் மோடி, மெகுல் சோக்ஸி, விஜய் மல்லையா. படங்கள்: ஊடகம் -

புது­டெல்லி: விஜய் மல்­லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்ஸி ஆகிய மூன்று தொழி­ல­தி­பர்­க­ளி­டம் இருந்து இது­வரை ரூ.13,109 கோடி மதிப்­புள்ள கடன் தொகை மீட்­கப்­பட்­டுள்­ளது. இத்­த­க­வலை மத்­திய நிதி­அமைச்சர் நிர்­மலா சீதா­ரா­மன் மக்­க­ள­வை­யில் தெரி­வித்­தார்.

இம்­மூன்று தொழி­ல­தி­பர்­களும் வங்­கி­யில் கடன் பெற்று அதை திருப்­பிச் செலுத்­தா­மல் வெளி­நாட்­டுக்­குத் தப்­பி­யோ­டி­ய­வர்­கள் ஆவர்.

நாடா­ளு­மன்ற விவா­தத்­தின்­போது வங்­கி­க­ளின் கடன் வசூலிப்பு குறித்து நிர்­மலா சீதா­ரா­மன் சில விளக்­கங்­களை அளித்­தார். அப்போது, மேற்­கு­றிப்­பிட்ட மூன்று தொழி­ல­தி­பர்­க­ளின் சொத்­து­களை விற்­பனை செய்து அதன் மூலம் 13,109 கோடி ரூபாய் திரட்­டப்­பட்­ட­தாக அவர் குறிப்­பிட்­டார்.

ஆகக்கடைசியாக, கடந்த ஜூலை மாதம் 16ஆம் தேதி விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான ரூ.792 கோடி சொத்து விற்பனை செய்யப்பட்டு அந்தத் தொகையானது வங்கிக் கடனுக்காக மீட்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்­திய வங்­கி­களில் கடன்பெற்று அதை திருப்­பிச் செலுத்­தா­மல் வெளி­நா­டு­க­ளுக்கு தப்­பி­யோ­டு­பவர்­கள் மீது கடும் நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­படும் என மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.

கடந்த ஏழு ஆண்­டு­களில் மட்­டும் பொதுத்­துறை வங்­கி­கள் ரூ.5.49 லட்­சம் கோடி கடனை திரும்ப வசூ­லித்­துள்­ளன. கடனைச் செலுத்த முடி­யா­த­வர்­க­ளின் சொத்து­கள் விற்கப்­பட்டு அந்­தப் பணம் வங்கிக்குச் செலுத்­தப்­பட்­டது.

"இந்த நட­வ­டிக்­கை­யால் வங்­கி­கள் இன்று பாது­காப்­பாக உள்­ளன. அதே­போல வங்­கி­யில் முத­லீடு செய்­துள்ள முத­லீட்­டா­ளர்­கள், வாடிக்கை­யா­ளர்­கள் பண­மும் பாது­காப்­பாக உள்­ளது," என்­றார் நிர்­மலா சீதா­ரா­மன்.