கோல்கத்தா மாநகராட்சித் தேர்தலில் திரிணாமூல் வெற்றி

கோல்கத்தா மாநகராட்சித் தேர்தலில் திரிணாமூல் வெற்றி

2 mins read
8ddc1058-9210-4f48-ba0d-33f4f7a6f4b9
தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் முதல்வர் மம்தா பானர்ஜியின் ஆதரவாளர்கள். படம்: ஏஎஃப்பி -

கோல்­கத்தா: அண்­மை­யில் நடந்து முடிந்த கோல்­கத்தா மாந­க­ராட்சி தேர்­த­லில் மேற்கு வங்க முதல்­வர் மம்தா பானர்ஜி தலை­மை­யி­லான திரி­ணா­மூல் காங்­கி­ரஸ் கட்சி அமோக வெற்றி பெற்­றுள்­ளது.

தேர்­தல் நடை­பெற்ற 144 வார்­டு­களில் 134 இடங்­களை அக்­கட்சி கைப்­பற்றி உள்­ளது.

காங்­கி­ர­சும் பாஜ­க­வும் பெரும் பின்­ன­டை­வைச் சந்­தித்­துள்­ளன. பாஜக மூன்று வார்டுகளிலும் காங்கிரசும் இடதுசாரிகளும் தலா இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மூன்று தொகுதிகளை கைப்பற்றிய சுயேட்சைகள் திரிணாமூல் கட்சியை ஆதரிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.

கோல்­கத்தா மாந­க­ராட்­சித் தேர்­த­லுக்­கான வாக்­குப்­ப­திவு கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெற்­றது. இதில் 63 விழுக்­காடு வாக்­கு­கள் பதி­வா­கின. மொத்­தம் உள்ள 144 வார்­டு­க­ளுக்கு நடை­பெற்ற தேர்­தலுக்­கான வாக்கு எண்­ணிக்கை நேற்று காலை தொடங்­கி­யது.

இதில் தொடக்­கம் முதலே பெரும்­பா­லான இடங்­களில் ஆளும் திரி­ணா­மூல் காங்­கி­ரஸ் முன்­னிலை வகித்­தது. நேற்று மாலை நில­வரப்­படி, 134 வார்­டு­களை அக்­கட்சி கைப்­பற்­றி­ய­தாக அதி­கா­ர­பூர்வ அறி­விப்பு வெளி­யா­னது.

இம்­முறை இளை­யர்­க­ளுக்­கும் அதி­கம் படித்­த­வர்­க­ளுக்­கும் வாய்ப்பு அளிக்­கப்­போ­வ­தாக பாஜக தலைமை அறிவித்­தி­ருந்தது. அதன்­படி, வழக்­க­றி­ஞர்­கள், பேரா­சி­ரி­யர்­க­ளுக்கு வாய்ப்பு அளிக்­கப்­பட்­டன.

இதற்கு நேர்­மா­றாக திரி­ணா­மூல் காங்­கி­ரஸ் கட்­சித் தலைமை அமைச்­சர்­க­ளுக்­கும் எம்­எல்­ஏக்­க­ளுக்­கும் நெருக்­க­மா­ன­வர்­க­ளுக்­குத்­தான் வாய்ப்பு வழங்­கி­ய­தாக கூறப்­ப­டு­கிறது. 73வது வார்­டில் முதல்­வர் மம்­தா­வின் மரு­ம­கள் பவா­னி­போர் கஜாரி கள­மி­றக்­கப்­பட்­டார். இந்­நிலை­யில், திரி­ணா­மூல் காங்­கி­ரஸ் கட்சி பெரும் வெற்­றி­யைப் பெற்­றுள்­ளது. கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த கோல்­கத்தா மாந­க­ராட்­சித் தேர்­த­லில் 114 வார்­டு­க­ளைக் கைப்­பற்­றி­யது திரி­ண­மூல் காங்­கி­ரஸ். அச்­ச­ம­யம் இட­து­சாரி கட்­சி­கள் 15, பாஜக 6, காங்­கி­ரஸ் 5 வார்­டு­களில் மட்­டுமே வெற்றி பெற்­றி­ருந்­தன.

தேர்­த­லுக்­குப் பிறகு இவர்­களில் பலர் முதல்­வர் மம்­தா­வுக்கு ஆத­ரவு தெரி­வித்து அணி­மா­றி­விட்­ட­னர். இந்த முறை­யும் அதே காட்­சி­கள் மீண்­டும் அரங்­கே­றும் என அர­சி­யல் கவ­னிப்­பா­ளர்­கள் கூறி­யது நடந்து வரு­கிறது.

இந்த வெற்றி மக்­கள் தங்­கள் பக்­கம் இருப்­பதை மீண்­டும் உறு­தி­படுத்தி உள்­ள­தாக முதல்­வர் மம்தா பானர்ஜி தெரி­வித்­துள்­ளார். காங்­கி­ர­சும் பாஜ­க­வும் எங்கே போயின என்று மக்­கள் கேட்­கி­றார்­கள் என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

தேசிய அள­வில் காங்­கி­ரஸ் கட்­சிக்கு மாற்­றாக திரி­ணா­மூல் காங்­கி­ரஸ் உரு­வெ­டுக்க வேண்­டும் என முதல்­வர் மம்தா பானர்ஜி விரும்­பு­வ­தா­கத் தெரி­கிறது. அதற்­கேற்ப அர­சி­யல் சது­ரங்­கத்­தில் அவர் காய்­களை நகர்த்தி வரு­கி­றார்.

அண்­மை­யில் மகா­ராஷ்­டி­ரா­வில் நடை­பெற்ற சட்­ட­மன்ற மேல­வைத் தேர்­த­லில் ஆளும் சிவ­சேனா கட்­சி­யை­விட பாஜக அதிக தொகு­தி­களில் வெற்றி பெற்­றது. அதே போன்று மேற்கு வங்­கத்­தி­லும் பாஜக முத்­திரை பதிக்­கும் என அக்­கட்­சி­யி­னர் கூறி வந்­த­னர். ஆனால், மம்­தா­வின் செல்­வாக்கு அதை அனு­ம­திக்­க­வில்லை என்­கி­றார்­கள் அர­சி­யல் பார்­வை­யா­ளர்­கள்.

மம்தா: மக்கள் நம் பக்கம் உள்ளனர் என்பதை நிரூபிக்கும் வெற்றி இது