'10 மில்லியன் மாணவர்களுக்கு இலவச கைபேசி, மடிக்கணினி'

'10 மில்லியன் மாணவர்களுக்கு இலவச கைபேசி, மடிக்கணினி'

1 mins read
c3369ce4-8d21-48bb-a997-e5df82214973
-

லக்னோ: அடுத்த ஆண்டு சட்­ட­மன்­றத் தேர்­தல் நடை­பெற உள்ள நிலை­யில், உத்­த­ரப் பிரதேச மக்களை பல்­வேறு 'இல­வச பொருள்' அறிவிப்பு­கள் மூலம் அர­சி­யல் கட்சி­கள் கவர்ந்து வரு­கின்­றன.

அந்த வகை­யில் அம்­மா­நி­லத்­தில் உள்ள பத்து மில்­லி­யன் மாண­வர்­களுக்கு இல­வச மடிக்­க­ணி­னி­யும் விவேக (திறன்) கைபே­சி­யும் வழங்­கப்­படும் என ஆளும் பாஜக அரசு அறி­வித்­துள்­ளது.

அண்­மை­யில் ஒரு பொதுக்­கூட்­டத்­தில் பேசிய சமாஜ்­வாடி கட்­சித் தலை­வர் அகி­லேஷ் யாதவ், முதல்வர் யோகி ஆதித்­ய­நாத் குறித்து கடு­மை­யாக விமர்­சித்­தார். முதல்­வ­ருக்கு கைபேசி, மடிக்­க­ணினி­யைப் பயன்­ப­டுத்­தத் தெரி­யாது என்­றும் கிண்­ட­லா­கக் குறிப்­பிட்­டார்.

இந்­நி­லை­யில் கல்­லூரி இறு­தி­யாண்டு படிக்­கும் பத்து மில்­லி­யன் மாண­வர்­க­ளுக்கு மடிக்­க­ணி­னி­யும் கைபே­சி­யும் வழங்­கும் அறி­விப்பை உத்­த­ரப்­பி­ர­தேச அரசு வெளி­யிட்டுள்ளது.

மேலும், அறி­விப்பை வெளி­யிட்ட கையோடு, வரும் 25ஆம் தேதியே இத்­திட்­டம் அம­லுக்கு வரும் என்­றும் தெரி­வித்­துள்­ளது. அன்று முன்னாள் பிர­த­மர் வாஜ்­பாய் பிறந்த நாளை­யொட்டி முதற்­கட்ட­மாக 100,000 மாண­வர்­க­ளுக்கு இல­வச கைபேசி வழங்­கப்­ப­டு­கிறது.