மாணவர் நலனுக்காக ஓட்டுநராக மாறிய தலைமை ஆசிரியர்

மாணவர் நலனுக்காக ஓட்டுநராக மாறிய தலைமை ஆசிரியர்

1 mins read
eb80a936-e75a-45b1-8c34-341825d6a762
மாணவர்களுடன் தலைமை ஆசிரியர் உதயகுமார். படம்: ஊடகம் -

திரு­வ­னந்­தபுரம்: ஏழ்மை நிலை­யில் உள்ள மாண­வர்­கள் பள்­ளி­யில் இருந்து இடை­யில் நின்­று­வி­டக் கூடாது என்ற அக்­கறை கார­ண­மாக, பல மாண­வர்­களை தமது சொந்த வாக­னத்­தில் பள்­ளிக்கு இல­வ­ச­மாக அழைத்து வரு­கி­றார் கேரள மாநில பள்­ளித் தலைமை ஆசிரி­யர் என்.உத­ய­கு­மார்.

கொல்­லம் மாவட்­டம், மேற்கு பூவத்­தூர் பகு­தி­யில் உள்ள அரசு தொடக்­கப் பள்­ளி­யில் ஏழை மாண­வர்­கள் சிலர் படித்து வரு­கின்­றனர். பள்­ளி­யில் இருந்து தொலை­வில் வசிப்­ப­தால் அம்­மாண­வர்­க­ளுக்கு உத­வும் வகை­யில் வாடகை வாக­னம் ஏற்­பாடு செய்­யப்­பட்­டது.

எனி­னும் கொரோனா நெருக்கடி கார­ண­மாக வாகன ஓட்­டு­நர் சரியா­கப் பணிக்கு வரு­வ­தில்லை. அதில் பய­ணம் செய்த வச­தி­யற்ற மாண­வர்­க­ளால் வேறு போக்­கு­வ­ரத்து ஏற்­பாட்­டைச் செய்து கொள்ள முடிய­வில்லை.

இதை­ய­றிந்த அப்­பள்­ளி­யின் புதிய தலைமை ஆசி­ரி­ய­ரான உதய­கு­மார், ஆட்டோ ஒன்றை வாங்கி தாமே மாண­வர்­களை இல­வ­ச­மாக பள்­ளிக்கு அழைத்து வரு­கி­றார்.

காலை 8.30 மணிக்கு கிளம்பி, பள்ளி தொடங்­கு­வ­தற்­குள் மாண­வர்­களை அழைத்து வந்­து­வி­டு­கி­றார். மாலை பள்ளி முடிந்த பிற­கும் அவரே மாண­வர்­களை வீட்­டிற்கு கொண்டு போய் விடு­கி­றார்.

இதை தாம் சுமை­யா­கக் கருத­வில்லை என்­றும் பள்­ளியில் மாண­வர்­கள் எண்­ணிக்கை குறை­வதை தானும் மற்ற ஆசி­ரி­யர்­களும் விரும்­ப­வில்லை என்­றும் உத­ய­குமார் கூறு­கி­றார்.

இவர் தலைமையாசிரியராகப் பணியில் சேர்ந்தபோது அப்பள்ளியில் 36 மாணவர்கள் இருந்தனர். இப்போது மாணவர் எண்ணிக்கை 154ஆக அதிகரித்துள்ளது.