இந்தியா: பல முக்கிய மசோதாக்கள் ஏற்பு ஒருநாள் முன்னதாகவே நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிந்தது

இந்தியா: பல முக்கிய மசோதாக்கள் ஏற்பு ஒருநாள் முன்னதாகவே நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிந்தது

2 mins read
e14d60c1-58b8-4b49-ac54-7a700c534719
-

புது­டெல்லி: இந்­திய நாடா­ளு­மன்ற குளிர்­கால கூட்­டத்­தொ­டர் ஒரு நாள் முன்­ன­தாக நேற்றே முடிந்தது.

கடந்த 29ஆம் தேதி தொடங்­கிய அந்­தக் கூட்­டத்தொட­ரின்­போது ஒன்­பது மசோ­தாக்­கள் நிறை­வேற்றப்­பட்­டு உள்­ள­தாக இரண்டு அவை­களின் தலை­வர்­களும் நேற்று அறி­வித்­த­னர்.

பெண்­க­ளின் திரு­மண வயதை 21ஆக அதி­க­ரிக்க வகை செய்­யும் மசோதா கூட்­டத்­தொ­ட­ரில் தாக்­கல் செய்­யப்­பட்­டது. தேர்­தல் சீர்­தி­ருத்­தம் உள்­ளிட்ட முக்­கிய மசோ­தாக்­கள் நிறை­வேற்­றப்­பட்­டன.

இந்நிலை­யில், முன்­ன­தாகவே கூட்­டத்­தொ­டர் முடித்துவைக்­கப்­பட்­டது. இந்­தக் கூட்­டத்­தொ­ட­ரில் லக்­கிம்­பூர் கேர் வன்­மு­றை­யில் மத்­திய அமைச்­சர் அஜய் மிஸ்­ராவை பதவி நீக்­கக்­கோரி எதிர்க்­கட்­சி­கள் முழக்­கங்­களை எழுப்­பின.

குளிர்­கால கூட்­டத்­தொ­ட­ரில் 12 மாநி­லங்­களவை எம்­பிக்­கள் தற்கா­லி­க­மாக நீக்­கப்­பட்ட விவ­காரம் தொடர்பில் தொடர்ந்து அமளி நில­வி­யது.

குளிர்­கால கூட்­டத்­தொ­டர் பற்றி கருத்து தெரி­வித்த மக்­க­ளவை மன்ற நாய­கர் ஓம் பிர்லா, பல்­வேறு இடை­யூ­று­க­ளால் மக்­க­ள­வை­யில் 18 மணி நேரம் வீணா­னது என்­றா­லும் தேர்­தல் சீர்­தி­ருத்த மசோதா உள்­ளிட்ட முக்­கிய மசோ­தாக்­கள் நிறை­வேற்­றப்­பட்­ட­ன என்றார்.

தேர்­தல் சட்­டத் திருத்த மசோதா 2021 நிறை­வே­றியபோது மன்­றத்­தில் பெரும் ரகளை அரங்­கே­றி­யது. அந்த மசோதா ஆதார் அட்டை விவ­ரங்­களை வாக்­குச்சீட்­டு­டன் இணைக்க வழி செய்­கிறது.

அந்த மசோ­தாவை பொறுக்­குக் குழு­வுக்கு அனுப்ப வேண்­டும் என்று திரி­ணா­முல் காங்­கி­ரஸ் குரல்­கொடுத்­தது. அந்­தக் கட்­சி­யின் உறுப்­பி­னர் ஒரு­வர் செய்­தி­யா­ளர் மேசையை நோக்கி சட்­டப் புத்­த­கத்தை வீசி எறிந்­தார். இறு­தி­யாக குரல் வாக்­கெ­டுப்பு மூலம் திங்­கட்­கி­ழமை மக்­க­ள­வை­யில் மசோதா நிறை­வே­றி­யது.

மசோதாவை ஆதரித்து விளக்கம் அளித்த சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, கள்ள வாக்­கு­களைப் பயன்­ப­டுத்­து­வோர் மட்­டுமே அந்த மசோ­தாவை எதிர்க்­கி­றார்­கள் என்று மன்­றத்­தில்­ கூறினார்.

பல்வேறு பரிந்துரைகளின் அடிப்படையில் பெண்ணின் திருமண வயதை 18-லிருந்து 21 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஆண், பெண் திருமண வயது சமமாக இருக்க வேண்டும் என்பதே இந்த மசோதாவின் நோக்கம் என இதற்காக அமைக்கப்பட்ட மத்திய அரசு குழு தெரிவித்தது. என்றாலும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்புக் குரலும் கிளம்பி உள்ளது.