ஒடிசா: இந்தியா, 'பிரலே' என்ற அடுத்த தலைமுறை குறுந்தொலைவு அணு ஏவுகணையை நேற்று ஒடிசா கடற்கரை அருகே வெற்றிகரமாக சோதித்தது.
அந்த ஏவுகணை 500 கி.மீ. தொலைவு வரை செல்லும் என்றும் ஒரு டன் ஆயுதங்களை ஏந்திச் செல்லும் என்றும் தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.
புதிய ஏவுகணை அனைத்து இலக்கையும் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளதாக தற்காப்பு ஆய்வு உருவாக்க நிறுவனம் கூறியது.

