பாவ்நகர்: குஜராத்தில் தன் நாய்க்கு சோனு என்று பெயர் வைத்த நீடாபென் சர்வையா என்ற பெண்மணியை ஆடவர் ஒருவர் தீ வைத்துக் கொளுத்தினார்.
அந்த ஆடவரின் மனைவியின் பெயர் சோனு, பக்கத்து வீட்டில் வசித்த நீடாபென், நாய்க்குத் தன் மனைவியின் பெயரை வைத்து அவமானப்படுத்துவதாக சூராபாய் பர்வத் என்ற அந்த ஆடவர் கருதினார். இரு குடும்பங்களுக்கும் இடையில் வேறு பகையும் இருந்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட நீடாபென் மருத்துவமனையில் உயிருக்குப் பேராடி வருவதாகவும் காவல் துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் ஊடகத் தகவல்கள் கூறின.

