60% தடுப்பூசி போட்டனர்; புதிதாக 7,495 பேருக்கு கொவிட்-19 தொற்று
புதுடெல்லி: இந்தியாவில் ஓமிக்ரான் தொற்று 236க்கு அதிகரித்துள்ளதால் நேற்று மத்திய அரசு அவசர ஆலோசனை நடத்தியது.
இதில் மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, அதன் வேகம் உள்ளிட்டவற்றை மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும். வருகிற பண்டிகை காலங்களில் உள்ளூர் அளவில் ஊரடங்கு விதிப்பதைக் குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு பகுதிகளில் இரவு நேர ஊரடங்குக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
"மக்கள் கூடும் இடங்களில் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஓமிக்ரான் பரவும் விகிதத்தைக் கண்டறிந்து மத்திய அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
"ஒவ்வொரு மாநிலமும் 100 விழுக்காடு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். தடுப்பூசி குறைவாக செலுத்தப் பட்டுள்ள மாநிலங்கள் போர்க்கால அடிப்படையில் வீடு வீடாகச் சென்று தடுப்பூசிகள் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவிலும் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் ஓமிக்ரான் தொற்று பரவத்தொடங்கியதும் ஆபத்தான நாடுகள் என கண்டறியப்பட்டுள்ள இந்த நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு கொவிட்-19 பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டது.
இந்தியாவில் உருமாறிய அதிவேகத்தில் பரவும் தன்மைகொண்ட ஓமிக்ரான் கிருமியால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 236க்கு அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தது. இதன்படி மகாராஷ்டிராவில் 65, டெல்லி 64, தெலுங்கானா 24, ராஜஸ்தான் 21, கர்நாடகா 19, கேரளா 15, குஜராத் 14, ஜம்மு-காஷ்மீர் 3, ஒடிசா 2, உத்தரப்பிரதேசம் 2, ஆந்திரா 2 ஓமிக்ரான் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப் பட்ட 65 பேரில் இதுவரை 35 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் டெல்லியில் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 64 பேரில் இதுவரை 23 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் அமைச்சு தெரிவித்தது.
இதற்கிைடயே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 7,495 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பாதிப்பு நேற்றைவிட 18.6% உயர்வாகும். இதில் கேரளாவில் மட்டும் 3,205 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஓமிக்ரான் கிருமிப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இவற்று டன் சேர்த்து மொத்த ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 34ஆக அதிகரித்துள்ளதாகவும் தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

