நேப்பிடாவ்: ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் மியன்மார் நாட்டுக்கு இந்தியா ஒரு மில்லியன் முறை போடக்கூடிய தடுப்பூசிகளை வழங்கியுள்ளது.
இம்மாதம் 22ஆம் தேதி மியன்மார் சென்ற இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா தடுப்பூசிகளை முறைப்படி ஒப் படைத்தார் என 'த இந்து' வெளி யிட்ட தகவல் தெரிவித்தது.
பிப்ரவரி மாதம் ஆங் சான் சூச்சி தலைமையிலான ஆட்சியை ராணுவம் கவிழ்த்த பிறகு அங்கு சென்ற முதல் வெளிநாட்டுத் தூதர் ஹர்ஷ் வர்தன் என நம்பப்படுகிறது.
"இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு மில்லியன் தடுப்பூசிகள் மியன் மார் செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டது," என்று மியன்மாரில் உள்ள இந்திய தூதரகம் அறிக்கை வாயிலாக தெரிவித்தது.
கொவிட்-19 தொற்றுக்கு எதிராகப் போராடி வரும் இந்திய- மியன்மார் எல்லையில் உள்ள மக்கள் உட்பட மியன்மார் மக்களுக்கு ஆதரவாக தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாகவும் அது கூறியது.
இந்திய எல்லையோரம் அமைந்து உள்ள பங்ளாதேஷ், பூட்டான், நேப் பாளம் போன்ற நாடுகளுக்கும் இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்த கொவிஷீல்ட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

