புதுடெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் மின்சார வாகனங்களுக்கான மின்னேற்றும் நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ் சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு புதன்கிழமை அன்று அவர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
"மின்சார வாகனங்கள் மற்றும் மாற்று எரிபொருளைப் பயன்படுத்து வதற்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
"மின்கலத்தால் இயங்கும் வாகனங்களுக்குப் பதிவுச் சான்றிதழ் கட்டணம் செலுத்துவதில் இருந்து சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு விலக்கு அளித்துள்ளது.
"மின்கலம் இல்லாத மின்சார வாகனங்களின் விற்பனை மற்றும் பதிவு தொடர்பான ஆலோசனையை அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ் சாலைகள் அமைச்சு வழங்கியுள்ளது.
"இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் வழங்கப்படும் சாலையோர வசதிகளின் ஒரு பகுதி யாக சாலை உருவாக்க நிறுவனத்தால் மின்சார வாகன மின்னேற்றும் நிலைய வசதிகள் வழங்கப்பட உள்ளன. இதுபோன்ற 39 வசதிகளை ஏற்கெனவே ஆணையம் வழங்கியுள்ளது. மேலும் 103 வசதிகளுக்கான ஒப்பந்தங்கள் வழங்கப்படவுள்ளன. ஏற்கெனவே வழங்கப்பட்ட பணிகள் 2022-23 நிதியாண்டின் இறுதிக்குள் முடிவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது," என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

