திருப்பதி: இலங்கை பிரதமர் ராஜபக்சே இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு நேற்று திருப்பதி வந்து சேர்ந்தார்.
திருப்பதி விமான நிலையத்தில் துணை முதல்வர் கே. நாரயணசுவாமி தலைமையிலான சித்தூர் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் ஹரிநாராயணன் மற்றும் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் அவரை வரவேற்றனர்.
திருமலையில் உள்ள கிருஷ்ணா நிவாஸ் விருந்தினர் மாளிகையில் இரவு ஓய்வெடுத்த பிறகு இன்று வெள்ளிக்கிழமை காலை முக்கிய விருந்தினருக் கான(விஐபி) தரிசனத்தில் அவர் ஏழுமலையானை தரிசனம் செய்கிறார்.
அவருக்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் லட்டு, சாமி படம் மற்றும் பிரசாதங்கள் வழங்கு வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு விமானம் மூலம் அவர் இலங்கை திரும்புகிறார். ராஜபக்சே வருகையையொட்டி திருப்பதி மற்றும் திருமலையில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடந்த நவம்பரில் பிரதமர் பொறுப்பு ஏற்ற பிறகு பிப்ரவரியில் முதல் வெளிநாட்டுப் பயணம் மேற் கொண்டு திருப்பதி வந்த ராஜ பக்சே ஏழுமலையானைத் தரிசித்து விட்டுச் சென்றார்.