'தடுப்பூசி போட்டால் ஊதியம்'
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் கொவிட்-19 தடுப்பூசி சான்றிதழை இணையத்தளத்தில் பதிவேற்றும் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே சம்பளம் வழங்கப்படும் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓமிக்ரான் பரவுவதால் அங்குள்ள முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் இவ்வாறு அறிவித்துள்ளது. "அரசு ஊழியர்கள் அனைவரும் ஒன்று அல்லது இரு முறை தடுப்பூசி செலுத்திய சான்றிதழை அரசு இணையத்தளத்தில் பதிவேற்ற வேண்டும். இல்லையென்றால் சம்பளம் இல்லை," என அரசு தெரி வித்துள்ளது.
மது அருந்தும் வயது 21
சண்டிகர்: அரியானா மாநிலத்தில் மதுபானம், இதர
வகை போதைப்பொருள்களை பயன்படுத்துவதற்கும் விற்பதற்கும் சட்டப்பூர்வ குறைந்தபட்ச வயது 25லிருந்து 21ஆக குறைக்கப்பட்டுள்ளது. அண்மையில் தலைநகர் டெல்லியிலும் போதைப்பொருள்கள் பயன்படுத்துவதற்கு மற்றும் விற்பதற்கான வயது வரம்பு 21ஆக குறைக்கப் பட்டது.
இந்திய சிறைகளில் 5,150
வெளிநாட்டுக் கைதிகள்
புதுடெல்லி: இந்தியாவில் பல்வேறு சிறைகளில் பல நாடுகளைச் சேர்ந்த 5,150 பேர் அடைக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்திய அரசு தெரிவித்தது.
இதில் அதிகபட்சமாக பங்ளாதேஷ் நாட்டைச் சேர்ந்த 2,513 பேரும் நைஜீரியாவைச் சேர்ந்த 811 பேரும் சிறை களில் அடைக்கப்பட்டுள்ளனர். நேப்பாள நாட்டைச் சேர்ந்த 745 பேர், மியன்மார் நாட்டைச் சேர்ந்த 306 பேர், பாகிஸ்தானைச் சார்ந்த 203 பேர், ஆப்பிரிக்க நாடு களைச் சேர்ந்த 150 பேர் இந்தியச் சிறைகளில் உள்ளனர். இலங்கையைச் சேர்ந்த 65 பேரும் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த 36 பேரும் சீனாவைச் சேர்ந்த 30 பேரும் வட அமெரிக்கா நாடுகளைச் சேர்ந்த 8 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

