தயார் நிலையில் இந்தியா

தயார் நிலையில் இந்தியா

2 mins read
32c0a3f8-31e7-4e6d-95b9-7cb84da461e8
அகமதாபாத்தில் உள்ள தடுப்பூசி நிலையத்தில் ஒருவர் தடுப்பூசி போட்டுக்கொள்கிறார். அதே சமயத்தில் இந்தியா முழுவதும் ஒரு பில்லியன் முறை தடுப்பூசி போடப்பட்டதைக் கொண்டாடும் வகையில் தடுப்பூசி நிலைய ஊழியர்கள் கோலம் போட்டு அலங்கரிக்கின்றனர். படம்: ராய்ட்டர்ஸ் -

'ஓமிக்ரான்' கிருமிப் பரவல் குறித்து பிரதமர் மோடி எச்சரிக்கை

ஜனவரி 3 முதல் சிறார்களுக்குத் தடுப்பூசி ஜனவரி 10 முதல் மூத்த குடிமக்களுக்கு கூடுதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

புது­டெல்லி: கொவிட்-19 கிரு­மியி லிருந்து உரு­மா­றிய ஓமிக்­ரான் உல­கம் முழு­வ­தும் புதிய அச்­சு­றுத்­தலை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கும் வேளை­யில் சிறார்­க­ளுக்­கும் தடுப்­பூசி போடப்­படும் என்று பிர­த­மர் மோடி அறி­வித்­துள்­ளார்.

பிர­த­மர் மோடி நாட்டு மக்­க­ளுக்கு ஆற்­றிய உரை­யில் ஓமிக்­ரான் கிருமி குறித்­தும் எச்­ச­ரித்­தார்.

"உலக நாடு­களில் ஓமிக்­ரான் கிரு­மிப்பாதிப்பு அதி­க­ரித்­துக்­கொண்டே வரு­கிறது. மக்­கள் யாரும் பதற்­றப்­ப­டா­மல், விழிப்­பு­டன் இருந்து முகக்கவ­சம் அணிந்து கைகளைத் தொடர்ந்து சுத்­தம் செய்­து­கொள்ள ேவண்­டும்.

"இந்­தி­யா­வில் நோயா­ளி­களைத் தனி­மைப்­ப­டுத்த 18 லட்­சம் படுக்­கை­கள், உயிர்­வாயு வசதி கொண்ட 5 லட்­சம் படுக்­கை­கள், 1.40 லட்­சம் தீவிர சிகிச்சைப் படுக்­கை­கள், 90,000 குழந்தைகளுக்­கான தீவிர சிகிச்சை படுக்­கை­கள் மற்­றும் பொது சிகிச்சை படுக்­கை­கள் தயார் நிலை­யில் வைக்­கப்­பட்­டுள்­ளன.

"மேலும் 3000க்கும் மேற்­பட்ட உயிர்­வாயு தயா­ரிக்­கும் ஆலை­கள் செயல்­பட்டு வரு­கின்­றன. நாடு முழு­வ­தும் நான்கு லட்­சம் உயிர்­வாயு உரு­ளை­கள் விநி­யோ­கிக்­கப்­பட்டு வரு­கின்­றன.

"கொரோ­னா­வின் தீவி­ரம் அறிந்து இந்­தி­யா­வில் 141 கோடிக்கும் அதிகமான அளவில் தடுப்­பூசி போடப்­பட்டு உள்­ளன," என்று திரு மோடி கூறி­னார்.

தடுப்­பூசி போட தகு­தி­யா­ன­வர்­களில் 90 விழுக்­கா­டுக்கு மேற்­பட்­டோ­ருக்கு ஒரு முறை­யா­வது தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளதையும் அவர் சுட்­டிக்காட்­டி­னார்.

"ஜன­வரி 15 முதல் 18 வயது வரை­யி­லான சிறு­வர்­க­ளுக்கு ஜன­வரி 3ஆம் தேதி முதல் தடுப்­பூசி போடப்படும்.

"நோய்­க­ளால் அவ­திப்­ப­டு­வோர் மற்­றும் 60 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­க­ளுக்கு மருத்­து­வர்­க­ளின் பரிந்­துரை அடிப்­ப­டை­யில் ஜன­வரி 10ஆம் தேதி முதல் கூடு­தல் (பூஸ்­டர்) தடுப்­பூசி போடப்படும். பூஸ்­டர் தடுப்­பூசி போடு­வ­தில் முன்­க­ளப் பணி­யா­ளர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும்.

"உல­கின் முதல் மர­பணு தடுப்­பூசி இந்­தி­யா­வுக்­கும் வர­வுள்­ளது. மூக்கு வழி­யாக செலுத்­தப்­படும் கொரோனா தடுப்பு மருந்­து­கள் விரை­வில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட உள்­ளன," என்று பிர­த­மர் மோடி மேலும் தெரி­வித்­தார்.