நூடல்ஸ் தொழிற்சாலை விபத்தில் ஆறு பேர் பலி

நூடல்ஸ் தொழிற்சாலை விபத்தில் ஆறு பேர் பலி

1 mins read
d6fcc087-28ef-4b72-a5a5-8f621c226a4a
-

பாட்னா: பீகார் மாநி­லத்­தில் நூடல்ஸ் தயா­ரிக்­கும் தொழிற் ­சா­லை­யில் கொதி­க­லன் வெடித்­த­தில் ஆறு பேர் கொல்­லப்­பட்­ட­னர்.

இதில் 12க்கும் மேற்­பட்­டோர் காயம் அடைந்­த­னர்.

முஸா­ஃபர்­பூ­ரில் அந்­தத் தொழிற்­சா­லை­யில் நேற்­றுக் காலை திடீ­ரென கொதி­க­லன் வெடித்­தது. சம்­ப­வம் குறித்து அறிந்த காவல்­து­றை­யி­ன­ரும் தீ அணைப்­புப் படை­யி­ன­ரும் அங்கு விரைந்­த­னர். ஆனால் அதற்­குள் தொழி­லா­ளர்­களில் ஆறு பேர் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­த­னர்.

காயம் அடைந்­த­வர்­கள் உட­ன­டி­யாக அரு­கில் உள்ள மருத்­து­வ ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர்.

சம்­ப­வத்­தின்­போது சுமார் 100 பேர் வேலை செய்­த­தா­கக் கூறப் ­ப­டுகிறது.

உயி­ரி­ழந்­த­வர்­களை அடை­யா­ளம் காணும் பணி மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். வெடிப்பு பயங்­க­ர­மா­ன­தாக இருந்­த­தா­க­வும் ஐந்து கிலோ மீட்­டர் தூரத்­துக்கு சத்­தம் கேட்­ட­தா­க­வும் 'லைவ் இந்­துஸ்­தான்' ஊட­கம் தெரி­வித்­தது.

இந்த விபத்­தில் அக்­கம்­பக்க கட்­ட­டங்­களும் சேதம் அடைந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது. விபத்து ஏற்­பட்­ட­தற்­காக கார­ணம் உட­ன­டி­யா­கத் தெரி­ய­வில்லை. காவல்­து­றை­யி­னர் விசா­ரித்து வரு­கின்­ற­னர். இதற்கிடையே விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அம் மாநில முதல்வர் நிதீஷ்குமார், குடும்பத்துக்கு தலா நான்கு லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க உத்தர விட்டுள்ளார்.