ஜம்மு: தற்போதைய அரசாங்கத்தைவிட மன்னராட்சி மேலானதாக இருந்ததாகப் பல்லாண்டுகள் கழித்து இன்று ஜம்மு-காஷ்மீா் மக்கள் கருதுகின்றனா் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.
ஜம்முவில் அவர் செய்தியாளர் களுக்குப் பேட்டியளித்தார்.
"ஜம்மு-காஷ்மீரில் தலைமைச் செயலகம், அரசு அலுவலகங்கள் கோடை காலத்தின் 6 மாதங்கள் ஸ்ரீநகரிலும், எஞ்சிய மாதங்கள் ஜம்முவிலும் நடைபெறும். இந்த நடைமுறை 1872ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரை ஆண்ட மன்னா் குலாப் சிங்கால் தொடங்கப்பட்டது. இந்த அரசவை மாற்ற நடை முறையை நான் எப்போதும் ஆதரித்து வந்துள்ளேன். ஆனால் இந்த நடைமுறைக்கு ஜம்மு-காஷ்மீரின் தற்போதைய துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா கடந்த ஜூன் 20ஆம் தேதி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
"இந்த நடைமுறை மட்டுமின்றி இங்குள்ள நிலம் மற்றும் வேலைவாய்ப்புகள் உள்ளூா் மக்களுக்குத்தான் சொந்தம் என்பதை ஜம்மு-காஷ்மீரை ஆண்ட மற்றொரு மன்னா் ஹரி சிங் உறுதி செய்து இருந்தார்.
"மன்னா்களை சா்வாதிகாரிகள் என்றழைப்பது வழக்கம். ஆனால் தற்போதைய அரசைவிட மன்னராட்சி மேலானதாக இருந்ததாகப் பல்லாண்டுகள் கழித்து இன்று ஜம்மு-காஷ்மீா் மக்கள் கருதுகின்றனா்.
"ஜம்மு-காஷ்மீரின் ஒட்டுமொத்த சூழல் தற்போது மிக மோசமாக உள்ளது. இங்குள்ள மக்கள் வறுமையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றனா்," என்று திரு குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.

